செய்திகள் :

பீகார்: பாஜக கொடியுடன் வந்த SUV கார்; காவலர்கள் மீது மோதியதில் பெண் காவலர் பலி; ஒட்டுநர் கைது

post image

பீகார் மாநிலம் பாட்னாவின் ஸ்ரீகிருஷ்ணா பூரி பகுதிக்கு அருகே, அடல் பாத் பகுதியில் வாகனப் பரிசோதனையிலிருந்த காவல்கள் மீது கார் மோதியது.

வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மூன்று காவலர்களும் உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

அதில், துணை ஆய்வாளர் தீபக் குமார், உதவி துணை ஆய்வாளர் அவதேஷ் குமார் ஆகியோர் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், நாலந்தா மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் கோமல் குமாரி (22) மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

காவலர் கோமல் குமாரி
காவலர் கோமல் குமாரி

இந்த சம்பவம் தொடர்பாகப் பேசிய மூத்த காவல் கண்காணிப்பாளர் (SSP) அவ்காஷ் குமார், ``ஸ்ரீகிருஷ்ணாபூரி காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டிருந்த மூன்று பாதுகாப்புப் பணியாளர்கள் அடல்பாத் பகுதியில் வாகனங்களைச் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது,​​வேகமாக வந்த மற்றொரு கார் பின்புறத்தில் மோதியதால், மூன்று காவலர்களும் காயமடைந்தனர். விபத்துக்குப் பிறகு வேகமாக வந்த காரின் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.

ஓட்டுநர் வேண்டுமென்றே

தப்பியோடிய ஓட்டுநர் நில வருவாய் அதிகாரியின் மகன் நிகில் என அடையாளம் காணப்பட்டது. அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது உட்பட, பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக அவர் மீது புகார்கள் இருக்கின்றன.

தேடுதல் வேட்டைக்குப் பிறகு நிகில் கைது செய்யப்பட்டார். ஸ்கார்பியோவின் ஓட்டுநர் வேண்டுமென்றே பணியில் இருந்த காவலர்களை மோதியதால், கொலை மற்றும் பிஎன்எஸ் சட்டத்தின் பிற பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும். சம்பந்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் பகுப்பாய்வு நடந்து வருகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட கார்
பறிமுதல் செய்யப்பட்ட கார்

அதிவேகத்திற்கான காரணங்கள், நோக்கம், அதில் பயணித்தவர்கள் ஏதேனும் போதையிலிருந்தார்களா அல்லது பிற குற்றச் செயல்களில் ஈடுபட்டார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

பாஜக கொடி

விபத்து ஏற்படுத்திய எஸ்யூவி காரில் பாஜக கொடி இருந்தது. இருப்பினும் வாகனத்தின் உரிமையாளருக்கும் அதில் பயணித்தவர்களுக்கும் இடையே என்ன அரசியல் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து காவல்துறை எதையும் தெரிவிக்கவில்லை.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

``உடல், மன ரீதியான பிரச்னை..'' - கிரானைட் முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்க துரை தயாநிதி மனு

அரசுக்கு ரூ.259 கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாக மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் ஒலிம்பஸ் நிறுவனம் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கிலிருந்து விடுவிக்க துரை தயாநிதி தரப்பில் மனு... மேலும் பார்க்க

Ooty: ஈட்டி மரங்கள் மீது அத்துமீறல்; பிரபல கான்ட்ரக்டர் ராயன் மீது வழக்கு; வனச் சட்டம் சொல்வது என்ன?

நீலகிரி மாவட்டத்தில் ஈட்டி, சந்தனம், தேக்கு போன்ற விலை உயர்ந்த மரங்கள் அதிகளவில் உள்ளன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள்‌ மட்டுமின்றி தனியாருக்குச் சொந்தமான நிலங்களிலும் இந்த வகை மரங்கள் காணப்படுகின்றன.தன... மேலும் பார்க்க

Operation Honeymoon: "சோனம் மீது சந்தேகம் வர இதான் காரணம்..." - மேகாலயா டிஜஜி சொல்வது என்ன?

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்சியும், அவரது மனைவி சோனமும் கடந்த மாதம் 21ம் மேகாலயாவிற்குத் தேனிலவிற்குச் சென்றனர்.சென்ற இடத்தில் அவர்கள் இருவரும் கடந்த 23ம் தேதி திடீரென காணாமல்... மேலும் பார்க்க

திருச்சி: காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ. 10,000 லஞ்சம் - பில் கலெக்டர் சிக்கியது எப்படி?

திருச்சி, கே.கே.நகரில் உள்ள இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன்.இவர், தனது மனைவி அறிவுச்செல்வி பெயரில் உள்ள திருச்சி, கொட்டப்பட்டு கிராமம், அன்பில் நகரில் சுமார் 5920 சதுரடி உள்ள காலிமனைக்கு ... மேலும் பார்க்க

வழக்கிலிருந்து விடுவிக்க ரூ.7 லட்சம் லஞ்சம்? - ஆசிரியர் புகார்... சிபிஐ அதிகாரி மீது வழக்கு பதிவு!

வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக ஆசிரியரிடம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் சிபிஐ அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆசிரியர் ராமச்சந்திரன்வருமான வரி மோசடி புகார் தொ... மேலும் பார்க்க

திரிபுரா: இளைஞரைக் கொன்று ஐஸ்கிரீம் பெட்டியில் வைத்த நபர்; முக்கோண காதல் விவகாரத்தில் என்ன நடந்தது?

திரிபுரா மாநிலம் அகார்த்தலாவைச் சேர்ந்த சரிபுல் இஸ்லாம் (28) என்ற வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போய்விட்டார்.இது தொடர்பாக சரிபுல் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக... மேலும் பார்க்க