செய்திகள் :

என் மூச்சு இருக்கும் வரை பாமக தலைவராக நானே தொடர்வேன்: ராமதாஸ்

post image

என் மூச்சு இருக்கும் வரை பாமக தலைவராக நானே தொடர்வேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தைலாபுரம் தோட்டத்திலுள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: தைலாபுரம் தோட்டத்திலுள்ள இல்லத்தில் வியாழக்கிழமை ( ஜூன் 12) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது, சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அன்புமணிக்கு தலைவர் பதவியைக் கொடுப்பதாகக் கூறினேன். ஆனால், நடப்பவற்றை பார்க்கும்போது, அன்புமணியின்செயல்களைப் பார்க்கும் போது என் மூச்சுக்காற்று நிற்கும் வரை அவரிடம் தலைவர் பதவியைக் கொடுக்க மாட்டேன்.

நான் (ராமதாஸ்) ஒரு நல்ல தந்தையாக, வழிகாட்டியாக இருந்திருக்கிறேன். ஆனால் மாநாட்டுக்குப் பிறகு நடைபெறுகின்ற செயல்களைப் பார்க்கும் போது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு நான் தலைவர் பதவியைக் கொடுக்கிறேன் எனக் கூறியதற்கு, ஏன் அப்படி கூறினீர்கள் என நூற்றுக்கு 99 சதவீதம் பேர் கேட்கின்றனர். தொண்டர்களின் வார்த்தைக்கு ஏற்ப, விருப்பத்துக்கு ஏற்ப இப்போது நான் கூறுகிறேன். என் மூச்சுக் காற்றும் நிற்கும் வரை அந்த தலைவர் பதவியில் நான் இருப்பேன்.

என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடங்கும் போது நான் கூறினேன். ஆனால், அதை காப்பாற்ற முடியவில்லை. தலித் எழில்மலை, பொன்னுசாமி போன்ற இன்னும் பலருக்கு அமைச்சர் பொறுப்புகளைக் கொடுக்கும் போது, அவர்களின் செயல்பாடுகளில் திருப்தி இல்லாத போது அன்புமணிக்கு பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று கட்சியின் மூத்தத் தலைவர்கள் வற்புறுத்தியதன் பேரில் 35 வயதிலேயே அவரை (அன்புமணி) மத்திய கேபினட் அமைச்சராக்கினேன்.

ஆனால் இரண்டரை ஆண்டுகளில் என்னால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. நான் வந்துவிடுகிறேன் என அன்புமணி கூறினார். ஆனால் நான் தினம், தினம் எப்படி செயல்பட வேண்டும் என்று பேசி, சமாதானம் செய்த பிறகு செயல்பட்டார். உலக அளவில் பல விருதுகளை வென்றார். ஆனால், அன்புமணியால் தந்தையிடம் விருது வாங்க முடியவில்லை. தந்தையை, தாயை மதிக்க வேண்டும். அப்படி கூறினாலே அன்புமணிக்கு கோபம் வருகிறது.

சித்திரை முழு நிலவு மாநாட்டுக்குப் பிறகு அன்புமணியின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளன. நான் எத்தனை ஆண்டுகள் உயிரோடு இருப்பேன் எனக் கூறும் போதெல்லாம், நீங்கள் நூறாண்டு வரை வாழ்வீர்கள் என அன்புமணி கூறுவார். ஆனால் என் மார்பிலும், முதுகிலும் ஈட்டியால் அவர் குத்தி வருகிறார். தூக்க மாத்திரைகளைப் போட்டாலும் எனக்கு தூக்கம் வரவில்லை. அன்புமணியை நினைக்காமலும் இருக்க முடியவில்லை. பாசத்தால் அல்ல, பாசமெல்லாம் போய்விட்டது. அன்புமணி செய்யும் ஒவ்வொரு செயலும் அடாத செயலாகும்.

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, மூத்தோர் சொல், வார்த்தை அமிர்தம். இவையெல்லாம் கூறினால் அதெல்லாம் பொய் என அன்புமணி கூறுவார். இந்த பிரச்னைக்கு ஒரே தீர்வு நான் செயல் தலைவராக ஏற்றுக் கொள்கிறேன். கட்சி நிறுவனர் சொல்லும் வழியில் நடந்து கொள்கிறேன் என்பதுதான். அப்படி நடந்து கொள்வேன் எனக் கூறுவார். ஆனால் வேறு மாதிரி நடந்து கொள்வார் அன்புமணி.

பாமகவின் தொண்டர்களை, கட்சி சொந்தங்களை நினைக்கும் போதெல்லாம் எனக்கு ஏற்படும் பூரிப்பும், ஆனந்தமும் சொல்லி மாளாது. ஆனால் அன்புமணியை நினைக்கும் போதெல்லாம் எனக்கு ஏற்படுகிற அதிர்ச்சி, மனக்குமுறல்கள் எனக்கு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கின்றன.

தாய்லாந்தில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்! ஏன்?

இந்த கட்சியை உருவாக்கிய என்னை ஒலிபெருக்கி வைத்து பேசக்கூடாது, 200 பேருக்கு மேல் கூட்டம் கூட்டக்கூடாது, அறையில்தான் என்னை சந்திக்க வேண்டும் என கட்டளையிட இவர் யார். கட்சியின் நிறுவனரை இப்படி சொல்லும் அதிகாரம் நான் கொடுக்கவில்லையே. என் மூச்சுக் காற்றும் நிற்கும் வரை பாமகவுக்கு நான் தலைவர், நிறுவனர்.

பாட்டாளி இளைஞர் சங்கத்தலைவர் பதவிக்கு பொருத்தமான ஒருவர் நியமிக்கப்படுவார். மேலும் காலியாகவுள்ள பல பொறுப்புகளும் நிரப்பப்படும். கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் முறையாகக் கூட்டப்படும். என்னை பார்க்க யார் வேண்டுமானாலும் வரலாம். முன் அனுமதி தேவையில்லை என்றார் ராமதாஸ்.

ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் செல்ல விண்ணப்பிக்கலாம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணம் செல்ல தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெ... மேலும் பார்க்க

மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது: கடலுக்குச் செல்லத் தயாராகும் மீனவா்கள்

வங்கக் கடல் பகுதியில் விசைப் படகுகள் மூலம் மீன் பிடிக்க விதிக்கப்பட்ட 61 நாள்கள் தடைக்காலம் சனிக்கிழமை (ஜூன் 14) நள்ளிரவுடன் முடிவடைவதையொட்டி சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுக மீனவா்கள் உள்ளிட்ட தமிழ... மேலும் பார்க்க

சிறந்த நூல்களுக்கு பரிசு: விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு

2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான தமிழ் வளா்ச்சித் துறை பரிசுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூலை 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழ் வளா்ச்சி இயக்குநா் ந.அருள் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகஸ்ட் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் தகவல்

சென்னையை அடுத்த குத்தம்பாக்கத்தின் அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவு பெற்று வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று இந்து சமய ... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டம் எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டது: ஆ.ராசா

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம் எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டதாக திமுக துணைப் பொதுச் செயலரும் மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா தெரிவித்தாா். அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியத்தின்... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு 20,317 போ் விண்ணப்பம்

இளநிலை கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு இதுவரை 20,317 போ் விண்ணப்பங்களைச் சமா்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விண்ணப்ப அவகாசம் வரும் 20-ஆம் தேதி வரை உள்ளதால் அந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ... மேலும் பார்க்க