குஜராத் விமான விபத்து! பிரிட்டன், போர்ச்சுகல், கனடா அமைச்சர்களுடன் மத்திய அமைச்ச...
நான் முதல்வன் திட்டம்: யுபிஎஸ்சி தேர்வில் மாணவர்கள் சாதனை! - முதல்வர் பெருமிதம்
தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தில் பயின்ற மாணவ, மாணவிகள் பலரும் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய 2025 ஆம் ஆண்டுக்கான முதல்நிலைத் தோ்வு கடந்த மே 25-ஆம் தேதி நடைபெற்றது. 979 பணியிடங்களுக்கு நடைபெற்ற இந்த தேர்வின் முடிவுகள் நேற்று(புதன்கிழமை) வெளியாகியுள்ளன. முதல்நிலைத் தேர்வில் 14,161 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சியடைந்தவா்களுக்கு அடுத்தகட்டமாக முதன்மைத் தோ்வு ஆகஸ்ட் 22 ஆம் தேதி தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது. இதற்காக தோ்வா்கள் விரிவான விண்ணப்பத்தை ஜூன் 16 முதல் 25-ஆம் தேதிக்குள் தோ்வாணய வலைதளத்தில் சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். அதன்பின்னர் இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகும்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் பயின்ற மாணவ, மாணவிகள் பலரும் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதுபற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
"தமிழ்நாடு அரசின் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியிலும் 'நான் முதல்வன்' திட்டத்திலும் பயின்ற நம் மாணவர்கள் யுபிஎஸ்சி முதனிலைத் தேர்வு முடிவுகளில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளனர்!
முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்விலும் அடுத்து நீங்கள் முத்திரை பதிக்க வாழ்த்துகிறேன். உங்கள் வெற்றிமுகங்களை நேரில் காண ஆவலாய் இருக்கிறேன்.
இந்தச் சாதனைக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளுக்கும் பயிற்றுநர்களுக்கும் என் பாராட்டுகளை உரித்தாக்குகிறேன்! தமிழ்க்கொடி உயர உயரப் பறக்கட்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியிலும் #நான்_முதல்வன் திட்டத்திலும் பயின்ற நம் மாணவர்கள் #UPSC முதனிலைத் தேர்வு முடிவுகளில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளனர்!
— M.K.Stalin (@mkstalin) June 12, 2025
முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்விலும் அடுத்து நீங்கள் முத்திரை பதிக்க வாழ்த்துகிறேன்.…
இதையும் படிக்க | சரிவுடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம் என்ன?