செய்திகள் :

வெப்ப அலையின் பிடியில் சிக்கிய தில்லி: சிவப்பு எச்சரிக்கை!

post image

தலைநகர் தில்லியில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதையடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல மாநிலங்களில் கோடைவெய்யில் கொளுத்திவருகின்றது. ஆனால் தமிழகம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கோடை வெப்பத்தின் பிடியிலிருந்து இந்த மாநிலங்கள் தப்பித்துள்ளது.

கேரளம், கர்நாடகம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் மிதமானது முதல் கனமழை பெய்துவரும் நிலையில், தலைநகர் தில்லியில் அதற்கு மாறாக கடும் வெய்யில் வெளுத்தி வருகின்றது. இதனால் அங்குள்ள மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

தில்லியின் என்சிஆர் பகுதியில் இன்று காலை 10 மணி வரை சுமார் 36 டிகிரி செல்சியஸைத் தொட்டுள்ளது. இதனால் தேசிய தலைநகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகப்படியான வெப்பத்திற்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

கடும் வெப்பநிலையானது இன்று நாள் முழுவதும் நீடிக்கும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 43 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் ஐஎம்டி எச்சரித்துள்ளது. நாளை(ஜூன் 13) வெள்ளிக்கிழமை முதல் இந்த வெப்பநிலையானது படிப்படியாகக் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிவப்பு எச்சரிக்கையை அடுத்து, குடியிருப்பாளர்கள் நீர் ஆகாரம் அதிகம் எடுத்துக்கொள்ளவும், நேரடியாகச் சூரிய ஒளி படும் உச்ச வெப்ப நேரங்களில் கூடுமானவரை வெளியில் வருவதைத் தவிர்க்கலாம். மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது.

தில்லி என்சிஆர் பகுதியில் உள்ள ஒருவர் கூறுகையில்,

தினமும் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருப்பதால் வெப்ப அலை காரணமாக அது மிகவும் கடினமாகிறது. அதிகாலையில் கூட, சாலையில் செல்லமுடியாத அளவிற்கு வெப்பம் நிலவுகிறது. வீடுகளை விட்டு வெளியேறுவதே மிகவும் கடினமாக மாறியுள்ளது என்று அவர் கூறினார்.

தலைநகரை வெப்ப அலை வாட்டி வதைத்து வருவதால், சுகாதார அதிகாரிகள், வானிலை நிபுணர்கள் மக்கள் முடிந்தவரை வீட்டிற்குள் இருக்கவும், வெப்பம் தொடர்பான நோய்களைத் தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவும் என்று தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.

விமான விபத்து: மருத்துவமனையில் துர்நாற்றம்! உடல்களை ஒப்படைப்பதில் சிக்கல்!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இதுவரை 265 உடல்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும், மருத்துவமனையைச் சுற்றிலும் துர்நாற்றம் வீசுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏர் இந்தியா விமான விபத்... மேலும் பார்க்க

விபத்துக்குள்ளான விமானத்தின் துணை விமானி 12த் பெயில் நடிகரின் உறவினர்!

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய துணை விமானி கிளைவ் குந்தர் தனது உறவினர் என்று நடிகர் விக்ராந்த் மாஸே தெரிவித்துள்ளார்.அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நேற்று க... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு!

ஈரானில் போர்ப் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள், ராணுவ அலுவலகங்கள், ராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்டவை குறித்து ஆபரேஷன்... மேலும் பார்க்க

விமானத்தில் அதிர்ஷ்டமான இருக்கையாக 11ஏ மீண்டும் நிரூபணம்! ஏன்? எப்படி?

அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 242 பேரில் 241 பேரும் பலியாக, ஒரே ஒருவர் உயிர் பிழைத்தார்.நிச்சயம், ஏர் இந்தியா விமான விபத்து குறித்து அறிந்... மேலும் பார்க்க

பேரழிவுக் காட்சிகளால் வேதனை! மோடி

விமான விபத்து நடைபெற்ற இடத்தின் பேரழிவுக் காட்சிகள் வேதனை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.அகமதாபாத் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்தை இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி நேரில்... மேலும் பார்க்க

விமான விபத்து: உயர்நிலை குழுவுடன் மோடி ஆலோசனை!

அகமதாபாத்தில் விமான விபத்து குறித்து உயர்நிலை குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டார்.அகமதாபாத் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்தை இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு ... மேலும் பார்க்க