செய்திகள் :

``பேய்கள் அழைக்கின்றன, செல்கிறேன்'' - கடிதம் எழுதி உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்.. என்ன நடந்தது?

post image

கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே உள்ள காடேற்றி பகுதியை சேர்ந்தவர் ராமசுப்பு (55). வருகின்றனர்.

இவருக்கு 3 மகன்களும் 1 மகளும் இருந்தனர். மர வேலை செய்து வரும் ராமசுப்பு தற்போது குருந்தன் கோட்டில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

ராமசுப்புவின் மூத்த மகன் இசக்கிமுத்து (32). வெல்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இசக்கி முத்து நேற்று முன்தினம் தான் வசிக்கும் வாடகை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

தற்கொலைசெய்துகொண்ட இசக்கிமுத்து

இது குறித்த தகவலின் பெயரில் இரணியல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். இசக்கி முத்துவின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இசக்கி முத்துவின் மரணம் குறித்து அவரது வீட்டிலும், அப்பகுதியில் உள்ளவர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும், போலீஸார் வீட்டில் நடத்திய சோதனையில் இசக்கிமுத்து தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு இசக்கி முத்து எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கியது.

தற்கொலை தடுப்பு மையம்

அந்த கடிதத்தில், தன்னை இரண்டு பேய்கள் அழைப்பதாகவும், அவைகளுடன் செல்வதாகவும் எழுதப்பட்டிருந்தது.

இதுகுறித்து இரணியல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இசக்கி முத்துவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனநோய் பாதிப்பு ஏற்பட்டு இருந்ததாக உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இது குறித்து மருத்துவ ரிப்போர்ட்டுகளை ஆய்வு செய்யவும், பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்தவும் போலீஸார் முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது.

Ooty: ஈட்டி மரங்கள் மீது அத்துமீறல்; பிரபல கான்ட்ரக்டர் ராயன் மீது வழக்கு; வனச் சட்டம் சொல்வது என்ன?

நீலகிரி மாவட்டத்தில் ஈட்டி, சந்தனம், தேக்கு போன்ற விலை உயர்ந்த மரங்கள் அதிகளவில் உள்ளன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள்‌ மட்டுமின்றி தனியாருக்குச் சொந்தமான நிலங்களிலும் இந்த வகை மரங்கள் காணப்படுகின்றன.தன... மேலும் பார்க்க

Operation Honeymoon: "சோனம் மீது சந்தேகம் வர இதான் காரணம்..." - மேகாலயா டிஜஜி சொல்வது என்ன?

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்சியும், அவரது மனைவி சோனமும் கடந்த மாதம் 21ம் மேகாலயாவிற்குத் தேனிலவிற்குச் சென்றனர்.சென்ற இடத்தில் அவர்கள் இருவரும் கடந்த 23ம் தேதி திடீரென காணாமல்... மேலும் பார்க்க

திருச்சி: காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ. 10,000 லஞ்சம் - பில் கலெக்டர் சிக்கியது எப்படி?

திருச்சி, கே.கே.நகரில் உள்ள இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன்.இவர், தனது மனைவி அறிவுச்செல்வி பெயரில் உள்ள திருச்சி, கொட்டப்பட்டு கிராமம், அன்பில் நகரில் சுமார் 5920 சதுரடி உள்ள காலிமனைக்கு ... மேலும் பார்க்க

வழக்கிலிருந்து விடுவிக்க ரூ.7 லட்சம் லஞ்சம்? - ஆசிரியர் புகார்... சிபிஐ அதிகாரி மீது வழக்கு பதிவு!

வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக ஆசிரியரிடம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் சிபிஐ அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆசிரியர் ராமச்சந்திரன்வருமான வரி மோசடி புகார் தொ... மேலும் பார்க்க

திரிபுரா: இளைஞரைக் கொன்று ஐஸ்கிரீம் பெட்டியில் வைத்த நபர்; முக்கோண காதல் விவகாரத்தில் என்ன நடந்தது?

திரிபுரா மாநிலம் அகார்த்தலாவைச் சேர்ந்த சரிபுல் இஸ்லாம் (28) என்ற வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போய்விட்டார்.இது தொடர்பாக சரிபுல் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக... மேலும் பார்க்க

திருப்பூர்: மாற்றுச் சமூக பெண்ணை மகன் மணந்ததால் கோவம்; மனைவியை வெட்டிக் கொன்று கணவர்; நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அடுத்த வேலப்பநாயக்கன்வலசு பாரக்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (65).இவரது மனைவி சாமியாத்தாள் (60). இவர்களுக்கு வித்யாசாகர் (33) என்ற மகனும், அபிநயா (36) என்ற ... மேலும் பார்க்க