Aamir Khan: "என் கனவுப் படமான மகாபாரதம்தான் என் கடைசிப் படமா?" - நடிகர் ஆமீர் கா...
``பேய்கள் அழைக்கின்றன, செல்கிறேன்'' - கடிதம் எழுதி உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்.. என்ன நடந்தது?
கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே உள்ள காடேற்றி பகுதியை சேர்ந்தவர் ராமசுப்பு (55). வருகின்றனர்.
இவருக்கு 3 மகன்களும் 1 மகளும் இருந்தனர். மர வேலை செய்து வரும் ராமசுப்பு தற்போது குருந்தன் கோட்டில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
ராமசுப்புவின் மூத்த மகன் இசக்கிமுத்து (32). வெல்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இசக்கி முத்து நேற்று முன்தினம் தான் வசிக்கும் வாடகை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

இது குறித்த தகவலின் பெயரில் இரணியல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். இசக்கி முத்துவின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இசக்கி முத்துவின் மரணம் குறித்து அவரது வீட்டிலும், அப்பகுதியில் உள்ளவர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும், போலீஸார் வீட்டில் நடத்திய சோதனையில் இசக்கிமுத்து தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு இசக்கி முத்து எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கியது.

அந்த கடிதத்தில், தன்னை இரண்டு பேய்கள் அழைப்பதாகவும், அவைகளுடன் செல்வதாகவும் எழுதப்பட்டிருந்தது.
இதுகுறித்து இரணியல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இசக்கி முத்துவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனநோய் பாதிப்பு ஏற்பட்டு இருந்ததாக உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து மருத்துவ ரிப்போர்ட்டுகளை ஆய்வு செய்யவும், பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்தவும் போலீஸார் முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது.