செய்திகள் :

பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 15,000! - ஆந்திரத்தில் புதிய திட்டம் அமல்

post image

ஆந்திரத்தில் பள்ளி மாணவர்களின் தாயாரின் வங்கிக் கணக்குகளில் ஆண்டுக்கு ரூ. 15,000 செலுத்தும் திட்டம் இன்று அமலுக்கு வந்துள்ளது.

ஆந்திரத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி ஆட்சி இருந்து வருகிறது. முன்னதாக தெலுங்கு தேசம் கட்சி கட்சி அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டது.

ஆந்திரத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வருவதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

இந்த புதிய திட்டத்தின் கீழ், 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளின் தாயாரின் வங்கிக் கணக்குகளில் ஆண்டுக்கு ரூ.15,000 செலுத்தப்படும். இதன் மூலம் 67 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைய உள்ளதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக இன்று ரூ. 8,745 கோடி மாணவர்களின் தாயாரின் வங்கிக்கணக்குகளில் செலுத்தப்படவுள்ளது.

ஒரு குடும்பத்தில் எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் இதில் பயன் பெறலாம் என்று கூறியுள்ள ஆந்திர அரசு, அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு, தனியார் பள்ளிகளில் பயில வேண்டும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும், 75% பள்ளி வருகைப் பதிவு இருக்க வேண்டும் உள்ளிட்ட ஒரு சில நிபதந்தனைகளை விதித்துள்ளது.

அங்கு வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணத் திட்டமும் அமல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | நான் முதல்வன் திட்டம்: யுபிஎஸ்சி தேர்வில் மாணவர்கள் சாதனை! - முதல்வர் பெருமிதம்

விமான விபத்தில் உயிர் தப்பியது ஒருவர் அல்ல இருவர்!

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்தது ஒருவர் அல்ல இருவர் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. பூமி சௌகான் பற்றிய தகவல்களை அறியும்போது.அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு ஒரு சில வினாடிகளில் ப... மேலும் பார்க்க

கருப்புப் பெட்டி மீட்பு! செய்திகள் நேரலை...

மருத்துவ தம்பதி பலிஅகமதாபாத் விமான விபத்தில் உதய்ப்பூரைச் சேர்ந்த மருத்துவ தம்பதி மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் பலியாகினர். லண்டனில் குடியேறும் கனவோடு இந்தியாவில் இருந்து புறப்பட்ட 5 பேரும் விமான... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! பலியான கேரள செவிலியரை விமர்சித்த வட்டாட்சியர் பணியிடை நீக்கம்!

அகமதாபாத் விமான விபத்தில் பலியான செவிலியரை விமர்சித்த கேரள தாசில்தார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் கேரளத்தைச் சேர்ந்த செவிலியர் ரஞ்சிதா கோபகுமாரன் (42) பலியானது... மேலும் பார்க்க

கடைசி செல்ஃபி! லண்டன் கனவுடன் புறப்பட்ட மருத்துவ தம்பதியின் கதை...

அகமதாபாத் விமான விபத்தில் உதய்ப்பூரைச் சேர்ந்த மருத்துவ தம்பதி மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் பலியாகினர்.அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நேற்று பிற்பகல் விபத்துக்குள்ளான... மேலும் பார்க்க

விமான விபத்திலிருந்து தப்பியதும் செய்த முதல் வேலை? விஸ்வாஸ் குமார் பதில்

நான் எப்படி உயிர் பிழைத்தேன், இப்போது உயிருடன் இருக்கிறேன் என்பதையே என்னால் நம்ப முடியவில்லை என்று ஏர் இந்திய விமான விபத்தில் உயிர் பிழைத்த விஸ்வாஸ் குமார் கூறியிருக்கிறார்.விமானம் விழுந்த போது, எனது ... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! பிரிட்டன், போர்ச்சுகல், கனடா அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் பேச்சு!

அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் வெளிநாட்டவர்களும் சிக்கி பலியானதால், அந்தந்த நாடுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.அகமதாபாத் ஏர் இந்தியா விமா... மேலும் பார்க்க