செய்திகள் :

விபத்துக்குள்ளான விமானத்தின் வயது 11.5 ஆண்டுகள்! 475 அடி உயரத்திலிருந்து விழுந்தது!

post image

ஆமதாபாத்: குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இன்று பகல் பிற்பகல் 1.40 மணிக்கு விழுந்து விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், கடந்த 11.5 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏஐ-171 விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 168 இந்தியர்கள் 53 பிரிட்டன் நாட்டவர்கள் இருந்துள்ளனர். இரண்டு விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேர் இருந்துள்ளனர். இவர்களில் 7 பேர் குழந்தைகள் என்றும், அதில் இரண்டு கைக்குழந்தைகள் என்றும் கூறப்படுகிறது.

விமானம் புறப்பட்ட சிறிது நிமிடத்திலேயே அதாவது 475 அடி உயரத்திலிருந்து விழுந்து விபத்துக்குள்ளானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த இடத்தில் இதுவரை 50 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

விமானத்தைப் பொறுத்தவரை 11.5 ஆண்டுகள் என்பது நடுத்தர வயதுதான் என்றும், ஒரு விமானம் நன்றாக பராமரிக்கப்பட்டால் 30 ஆண்டுகள் வரை இயக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே, விபத்துக்குள்ளான விமானத்தில் ஆயுள் காலம் பற்றிய சந்தேகம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து 1.39 மணிக்கு ஆபத்து குறித்த அழைப்பு வந்த சில வினாடிகளில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. சென்னையில் இருந்து ஆமதாபாத் சென்ற விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. விமான விபத்தையடுத்து ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

மனைவி அஸ்தியைக் கரைக்க வந்தவர் விமான விபத்தில் பலி! லண்டனில் தவிக்கும் மகள்கள்!

மனைவியின் அஸ்தியை நர்மதை ஆற்றில் கரைக்க லண்டனில் இருந்து வந்த அர்ஜுன் பட்டோலியா, இறுதிச் சடங்குகளை செய்து முடித்துவிட்டு லண்டன் திரும்பும்போது விமான விபத்தில் பலியாகியுள்ளார்.மனைவியின் இறுதி ஆசையை நிற... மேலும் பார்க்க

நான்காவது முயற்சியில்தான் கொலை! சோனம் வெளியிட்ட திடுக்கிடும் வாக்குமூலம்...

மூன்று முறை கொலை முயற்சியில் தப்பிய ராஜா ரகுவன்ஷியை நான்காவது முறையில் கொன்றதாக அவரது மனைவி சோனம் வாக்குமூலம் அளித்துள்ளார்.மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி - சோனம் தம்பதியினர் தி... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிர் தப்பியது ஒருவர் அல்ல இருவர்!

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்தது ஒருவர் அல்ல இருவர் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. பூமி சௌகான் பற்றிய தகவல்களை அறியும்போது.அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு ஒரு சில வினாடிகளில் ப... மேலும் பார்க்க

கருப்புப் பெட்டி மீட்பு! செய்திகள் நேரலை...

மருத்துவ தம்பதி பலிஅகமதாபாத் விமான விபத்தில் உதய்ப்பூரைச் சேர்ந்த மருத்துவ தம்பதி மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் பலியாகினர். லண்டனில் குடியேறும் கனவோடு இந்தியாவில் இருந்து புறப்பட்ட 5 பேரும் விமான... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! பலியான கேரள செவிலியரை விமர்சித்த வட்டாட்சியர் பணியிடை நீக்கம்!

அகமதாபாத் விமான விபத்தில் பலியான செவிலியரை விமர்சித்த கேரள தாசில்தார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் கேரளத்தைச் சேர்ந்த செவிலியர் ரஞ்சிதா கோபகுமாரன் (42) பலியானது... மேலும் பார்க்க

கடைசி செல்ஃபி! லண்டன் கனவுடன் புறப்பட்ட மருத்துவ தம்பதியின் கதை...

அகமதாபாத் விமான விபத்தில் உதய்ப்பூரைச் சேர்ந்த மருத்துவ தம்பதி மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் பலியாகினர்.அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நேற்று பிற்பகல் விபத்துக்குள்ளான... மேலும் பார்க்க