செய்திகள் :

விபத்துதான்! உறுதிசெய்தது ஏர் இந்தியா!

post image

ஆமதாபாத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சம்பவத்தில் சிக்கியதாக பதிவிட்ட விமான நிர்வாகம், தற்போது விபத்தில் சிக்கியதாக உறுதி செய்துள்ளது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு இன்று பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சிறிது நேரத்தில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விமானத்தில் பயணித்த 242 பேரின் நிலை என்னவென்று தெரியாத நிலையில், விபத்து குறித்து ஏர் இந்தியா நிர்வாகம் முதலில் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், விமானம் சம்பவத்தில் சிக்கியதாக தெரிவித்திருந்தது.

இதனால், விமானத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? போன்ற குழப்பம் ஏற்பட்டது.

இந்த நிலையில், விமானம் விபத்தில் சிக்கியதாக ஏர் இந்தியா நிறுவனம் உறுதிசெய்து மீண்டும் பதிவிட்டுள்ளது.

அதில் தெரிவித்திருப்பதாவது:

”ஆமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்துக்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 விமானம் இன்று விபத்தில் சிக்கியதை ஏர் இந்தியா உறுதிபடுத்துகிறது.

ஆமதாபாத்தில் இருந்து பிற்பகல் 13.38 மணிக்கு புறப்பட்ட போயிங் 787-8 ரக விமானத்தில் 242 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்.

இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டவர்கள், ஒரு கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டவர் ஆவர்.

காயத்துடன் மீட்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். மேலும் தகவல்களுக்கு 1800 5691 444 என்ற பிரத்யேக அவசர எண்ணை நாங்கள் அமைத்துள்ளோம்.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்கும் அதிகாரிகளுக்கு ஏர் இந்தியா முழு ஒத்துழைப்பையும் அளிக்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிக்க : விமானம் விழுந்தது விபத்தா? சம்பவமா? குழப்புகிறது ஏர் இந்தியா!

தேனிலவு கொலை: மற்றொரு பெண்ணைக் கொன்று நாடகமாக திட்டமிட்டிருந்த சோனம்!

தேனிலவு அழைத்துச் சென்று கணவரைக் கொலை செய்த வழக்கில் கைதான சோனம், மற்றொரு பெண்ணையும் கொன்று, அந்த உடலை சோனம் என்று நாடகமாட திட்டமிட்டிருந்த தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் பார்க்க

மனைவி அஸ்தியைக் கரைக்க வந்தவர் விமான விபத்தில் பலி! லண்டனில் தவிக்கும் மகள்கள்!

மனைவியின் அஸ்தியை நர்மதை ஆற்றில் கரைக்க லண்டனில் இருந்து வந்த அர்ஜுன் பட்டோலியா, இறுதிச் சடங்குகளை செய்து முடித்துவிட்டு லண்டன் திரும்பும்போது விமான விபத்தில் பலியாகியுள்ளார்.மனைவியின் இறுதி ஆசையை நிற... மேலும் பார்க்க

நான்காவது முயற்சியில்தான் கொலை! சோனம் வெளியிட்ட திடுக்கிடும் வாக்குமூலம்...

மூன்று முறை கொலை முயற்சியில் தப்பிய ராஜா ரகுவன்ஷியை நான்காவது முறையில் கொன்றதாக அவரது மனைவி சோனம் வாக்குமூலம் அளித்துள்ளார்.மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி - சோனம் தம்பதியினர் தி... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிர் தப்பியது ஒருவர் அல்ல இருவர்!

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்தது ஒருவர் அல்ல இருவர் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. பூமி சௌகான் பற்றிய தகவல்களை அறியும்போது.அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு ஒரு சில வினாடிகளில் ப... மேலும் பார்க்க

கருப்புப் பெட்டி மீட்பு! செய்திகள் நேரலை...

மருத்துவ தம்பதி பலிஅகமதாபாத் விமான விபத்தில் உதய்ப்பூரைச் சேர்ந்த மருத்துவ தம்பதி மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் பலியாகினர். லண்டனில் குடியேறும் கனவோடு இந்தியாவில் இருந்து புறப்பட்ட 5 பேரும் விமான... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! பலியான கேரள செவிலியரை விமர்சித்த வட்டாட்சியர் பணியிடை நீக்கம்!

அகமதாபாத் விமான விபத்தில் பலியான செவிலியரை விமர்சித்த கேரள தாசில்தார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் கேரளத்தைச் சேர்ந்த செவிலியர் ரஞ்சிதா கோபகுமாரன் (42) பலியானது... மேலும் பார்க்க