Ahmedabad Airplane Accident : 'விமானத்தில் பயணித்த பாஜக முன்னாள் முதல்வர்?' - நிலை என்ன?
குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
அந்த விமானத்தில் குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் பயணித்ததாகச் செய்திகள் வெளியாகியிருக்கிறது.

அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட AI 171 என்ற எண் கொண்ட போயிங் 787 ரக விமானத்தில், விமான குழுவினரோடு சேர்த்து மொத்தமாக 242 பேர் பயணித்திருக்கிறார்கள்.
தங்களின் விமானம் விபத்துக்குள்ளாகியிருப்பதாக ஏர் இந்தியா நிறுவனமும் தங்களின் X பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா குஜராத்தின் முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சருடன் இந்த விபத்து பற்றி ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கிறது.

அகமதாபாத்தின் விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மெஹானி எனும் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியிருக்கிறது.
லண்டனின் காட்விக்கை நோக்கிப் புறப்பட்ட இந்த விமானத்தில் பா.ஜ.க-வைச் சேர்ந்த குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் பயணித்ததாக Economic Time, Gujart TV 9 போன்ற நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.