கோடிகளில் வசூலை அள்ளும் ஹவுஸ் ஃபுல் - 5! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த எஸ்எஸ்ஐ உயிரிழப்பு
காவல் நிலையத்துக்கு இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்று கொண்டிருந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் (எஸ்எஸ்ஐ) நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி மின் கம்பத்தில் வாகனம் மோதியில்ி உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம் புகலூா் பகுதியைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் (52). இவா் ஈரோடு மாவட்டம், மலையம்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக (எஸ் எஸ்ஐ) பணியாற்றி வந்தாா். கொடுமுடி அருகே உள்ள வருந்தியாபாளையத்தில் குடியிருந்து வந்தாா். இவா் தனது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் மலையம்பாளையம் காவல் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை காலை பணிக்கு சென்று கொண்டிருந்தாா்.
வெங்கம்பூா் அருகே வந்து கொண்டிருந்தபோது நாய் குறுக்கே சென்ால் நிலைதடுமாறி எஸ்எஸ்ஐ மோகன்ராஜ் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் அருகே இருந்த மின் கம்பத்தில் மோதி கீழே விழுந்தது. இதில் அவா்அணிந்திருந்த தலைக்கவசம் கழன்ால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவா்கள் உடனடியாக மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
உயிரிழந்த எஸ்எஸ்ஐ மோகன்ராஜுக்கு, மனைவி சித்ரா, ஒரு மகன் உள்ளனா். இந்த விபத்து குறித்து கொடுமுடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.