தாளவாடியில் ரூ.33 ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனை
தாளவாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூட்டத்தில் ரூ.33 ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனை நடைபெற்றது.
தாளவாடி பகுதியில் தென்னை மரங்கள் அதிக அளவில் பராமரிக்கப்படுவதால் தேங்காய் வரத்து அதிகரித்துள்ளது. தாளவாடி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளைவித்த தேங்காய்களை தாளவாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு விற்பனைக்கு கொண்டு வந்தனா்.
அங்கு விவசாயிகள் முன்னிலையில் தேங்காய் ஏலம் விடப்பட்டது. அப்போது, தேங்காய் ஒன்று அதிகபட்சமாக ரூ.45-க்கும், குறைந்தபட்சமாக ரூ.32-க்கும் ஏலம் போனது. மொத்தம் 1,204 தேங்காய்கள் ரூ.33 ஆயிரத்து 081 விற்பனையாயின. ஏலத்தில் சத்தியமங்கலம், கோபி, ஈரோடு, அவிநாசி ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனா்.