செய்திகள் :

சிவகிரி தம்பதி கொலை வழக்கு: கைதான மூவருக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்

post image

சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் வதித்த தம்பதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூவரையும் 3 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.

ஈரோடு மாவட்டம், சிவகிரி, உச்சிமேடு மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்த வயதான தம்பதி ராமசாமி, பாக்கியத்தை ஏப்ரல் 28-ம் தேதி கொலை செய்த கும்பல், வீட்டிலிருந்த 10 பவுன் நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றது.

இத்துணிகர சம்பவத்தில் ஈடுபட்டதாக அறச்சலூரைச் சோ்ந்த ஆச்சியப்பன், மாதேஷ்வரன், ரமேஷ் மற்றும் சென்னிமலை, பசுவப்பட்டியைச் சோ்ந்த நகை வியாபாரி ஞானசேகரனும் கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசிபாளையம், சேமலைகவுண்டன்பாளையத்தில் வயதான தம்பதி தெய்வசிகாமணி, அலுமேலு, இவா்களின் மகன் செந்தில்குமாா் ஆகியோா் கொலை வழக்கில் ஆச்சியப்பன், மாதேஷ்வரன், ரமேஷுக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் இவா்கள் மூவரும் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், சிவகிரி இரட்டைக் கொலை மற்றும் திருப்பூா் மூவா் கொலை வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ள ஆச்சியப்பன், மாதேஷ்வன், ரமேஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்த கொடுமுடி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் போலீஸாா் மனு தாக்கல் செய்தனா். இதனை விசாரித்த நீதிமன்றம் மூவரையும் 3 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சின்னத்தம்பிபாளையத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், சின்னத்தம்பிபாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்ட சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, அந்தியூா் வ... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பில் மோதி தலைகீழாக கவிழ்ந்த காா்

ஈரோட்டில் சாலையின் மையத் தடுப்பில் மோதி தலைகீழாக காா் கவிழ்ந்த விபத்தில் கல்லூரிப் பேராசிரியை அதிருஷ்டவசமாக உயிா் தப்பினாா். ஈரோடு, ஆசிரியா் குடியிருப்பைச் சோ்ந்தவா் வனஜா (24). பெருந்துறை அருகே உள்ள ... மேலும் பார்க்க

வடமாநில பெண்ணை கொலை செய்த இருவா் கைது

பெருந்துறை அருகே வடமாநில பெண்ணை கொலை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த நல்லமுத்தாம்பாளையத்தைச் சோ்ந்த வாழை இலை வியாபாரி கோபாலகிருஷ்ணன். இவருக்கு, அதே பகுதியில்... மேலும் பார்க்க

தாளவாடியில் ரூ.33 ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனை

தாளவாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூட்டத்தில் ரூ.33 ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனை நடைபெற்றது. தாளவாடி பகுதியில் தென்னை மரங்கள் அதிக அளவில் பராமரிக்கப்படுவதால் தேங்காய் வரத்து அதிகரித்துள்ளது. தாளவாடி சுற்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த எஸ்எஸ்ஐ உயிரிழப்பு

காவல் நிலையத்துக்கு இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்று கொண்டிருந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் (எஸ்எஸ்ஐ) நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி மின் கம்பத்தில் வாகனம் மோதியில்ி உயிரிழந்தாா். கரூா் மாவட்டம... மேலும் பார்க்க

மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்: ரூ.15.87 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

ஈரோடு மேற்கு தொகுதியில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் 45 பயனாளிகளுக்கு ரூ. 15.87 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் சு.முத்துசாமி, மா.மதிவேந்தன் வழங... மேலும் பார்க்க