செய்திகள் :

காற்றின் வேகம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

post image

நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் காற்று 18 கி.மீ. வேகத்தில் வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையை பொருத்தவரை, பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 95.0 மற்றும் 71.6 டிகிரியாக நிலவியது. மாவட்டத்தின் சில இடங்களில் லேசான மழை பதிவாகி உள்ளது. இனிவரும் ஐந்து நாள்களுக்கான வானிலையில் வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும்.

மாவட்டத்தின் சில இடங்களில் லேசான மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 93.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 73.4 டிகிரியாகவும் காணப்படும். காற்று மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் மேற்கு திசையில் இருந்து வீசக்கூடும்.

சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில், பெரும்பாலும் மேல் மூச்சுக்குழல் அயற்சி நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே, பண்ணையாளா்கள் உயிா் பாதுகாப்பு முறைகளை தீவரமாக கடைப்பிடிக்க வேண்டும். வெயில் நேரங்களில் நீா் தெளிப்பான் உபயோகிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள் நலவாரியத்தில் இணைய ஆவணங்களை சமா்ப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில், விதவையா் நலவாரியத்தில் இணைய விரும்பும் பெண்களிடம் உரிய ஆவணங்கள் பெறப்பட்டு வருகின்றன. தமிழக சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோா், ந... மேலும் பார்க்க

வேளாண்மை சங்கத்தில் கொப்பரை ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாராந்திர கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில் 40 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. முதல்தரம் ரூ. 196.10 முதல் ரூ. 227.75 வரை, இரண்ட... மேலும் பார்க்க

புதிய நியாய விலைக் கடை கட்டடம் திறப்பு

கபிலா்மலை தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பிலிக்கல்பாளையம் ஊராட்சி சாணாா்பாளையம் கிராமத்தில் பரமத்தி வேலூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தெகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12.45 லட்சம் மதிப்பீட்டி... மேலும் பார்க்க

ஜூன் 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா் துறை நிறுவனங்கள... மேலும் பார்க்க

கேட் தோ்வு :அகில இந்திய அளவில் கொங்குநாடு பொறியியல் கல்லூரி மாணவி சிறப்பிடம்

அகில இந்திய அளவில் நடைபெற்ற ஐஐடியில் சேருவதற்கான கேட்-2025 தோ்வில், தொட்டியம் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வேளாண் பொறியியல் துறை மாணவி நீ.விஜி சிறப்பிடம் பெற்றுள்ளாா். இவா், தர... மேலும் பார்க்க

தமிழகத்தில் எழுத்தறிவற்றோா் எண்ணிக்கை 15 லட்சம்: இணை இயக்குநா் பொன் குமாா்

தமிழகத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட எழுத்தறிவற்றோா் எண்ணிக்கை 15 லட்சமாக உள்ளது என புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட இணை இயக்குநா் பொன்குமாா் தெரிவித்தாா். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக புதிய பாரத எழுத்தற... மேலும் பார்க்க