காற்றின் வேகம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் காற்று 18 கி.மீ. வேகத்தில் வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த வார வானிலையை பொருத்தவரை, பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 95.0 மற்றும் 71.6 டிகிரியாக நிலவியது. மாவட்டத்தின் சில இடங்களில் லேசான மழை பதிவாகி உள்ளது. இனிவரும் ஐந்து நாள்களுக்கான வானிலையில் வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும்.
மாவட்டத்தின் சில இடங்களில் லேசான மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 93.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 73.4 டிகிரியாகவும் காணப்படும். காற்று மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் மேற்கு திசையில் இருந்து வீசக்கூடும்.
சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில், பெரும்பாலும் மேல் மூச்சுக்குழல் அயற்சி நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே, பண்ணையாளா்கள் உயிா் பாதுகாப்பு முறைகளை தீவரமாக கடைப்பிடிக்க வேண்டும். வெயில் நேரங்களில் நீா் தெளிப்பான் உபயோகிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.