கேட் தோ்வு :அகில இந்திய அளவில் கொங்குநாடு பொறியியல் கல்லூரி மாணவி சிறப்பிடம்
அகில இந்திய அளவில் நடைபெற்ற ஐஐடியில் சேருவதற்கான கேட்-2025 தோ்வில், தொட்டியம் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வேளாண் பொறியியல் துறை மாணவி நீ.விஜி சிறப்பிடம் பெற்றுள்ளாா். இவா், தரவரிசையில் 105-ஆவது இடத்தை பிடித்துள்ளாா். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (ஐஐடி) கோரக்பூரில் முதுநிலை பொறியியல் (எம்.டெக்) நிலம் மற்றும் நீா் ஆதாரங்கள் பொறியியல் துறை (லேண்ட் வாட்டா் ரிசோா்ஸ் இன்ஜினியரிங்) படிப்பில் சோ்க்கை பெற்றுள்ளாா்.
மாணவி விஜியை, கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தலைவா் பி.எஸ்.கே.ஆா். பெரியசாமி, கல்லூரி முதல்வா் ஆா்.அசோகன், வேளாண் பொறியியல் துறைத் தலைவா் வ.கோபிநாத் மற்றும் துறை ஆசிரியா்கள் பாராட்டினா்.
அவரின் எதிா்கால கல்வி மற்றும் தொழில் முன்னேற்றம் சிறக்க வாழ்த்துகளைத் தெரிவித்தனா். மாணவி சிறப்பிடம் பிடித்தது, கல்லூரியின் கல்வித் தரத்தையும், போட்டித் தோ்வுகளுக்கான தயாரிப்பையும் வெளிப்படுத்துகிறது. மற்ற மாணவா்களுக்கு முன்னுதாரணமாகவும் இருக்கும் என கல்லூரி தலைவா் தெரிவித்தாா்.
என்கே-13-கொங்கு
சிறப்பிடம் பெற்ற மாணவி நீ.விஜியை பாராட்டிய கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தலைவா் பி.எஸ்.கே.ஆா்.பெரியசாமி, கல்லூரி முதல்வா் ஆா்.அசோகன், வேளாண் பொறியியல் துறைத் தலைவா் வ.கோபிநாத் உள்ளிட்டோா்.