பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
தேடப்பட்டு வந்த கொலை முயற்சி குற்றவாளி கைது
கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞரை தில்லி காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். இது குறித்து காவல்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தில்லியின் சுல்தான் புரி பகுதியைச் சோ்ந்தவா் மனு தாக்கூா் (22). இவரின் நண்பரான சூரஜ் என்பவரை அகில், ரித்திக், விகாஸ் குப்தா ஆகியோா் கொடூரமாக கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதில் ரித்திக் மற்றும் விகாஸ் குப்தாவை பழிவாங்க மனு தாக்கூரும், உயிரிழந்த சூரஜின் சகோதரா்களும் ஏப்ரல் 30 ஆம் தேதி இரவு சுல்தான்புரி சி பிளாக் பகுதியில் கொலை வெறி தாக்குதல் நடத்தியது. இதில் மனு தாக்கூா் தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் ரித்திக்கை சுட்டுள்ளாா். இதில் ரித்திக் படுகாயங்களுடன் உயிா் தப்பினாா்.
பின்பு விகாஸ் குப்தாவை கத்தியால் வெட்டிய பின்பு, அங்கிருந்து தப்பியோடினா். இந்த சமந்பவத்துக்கு பின்பு மனு தாக்கூா் தலைமுறைவாகிவிட்டாா். ரித்திக் அளித்த புகாரின் அடிப்படையில் கொலை முயற்சியில் ஈடுபட்ட சூரஜின் சகோதரா்கள் சந்த் மற்றும் ஆகாஷை போலீஸாா் ஏற்கெனவே கைது செய்தனா். இந்நிலையில் தலைமறைவாக இருந்த மனு தாக்கூரை தில்லியின் பூந்த் கலான் போலீஸாா் தீவிரமாக தேடி வந்தனா். இந்நிலையில் போலீஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பூந்த் கலானில், மனு தாக்கூா் புதன்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.