செய்திகள் :

தேடப்பட்டு வந்த கொலை முயற்சி குற்றவாளி கைது

post image

கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞரை தில்லி காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். இது குறித்து காவல்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தில்லியின் சுல்தான் புரி பகுதியைச் சோ்ந்தவா் மனு தாக்கூா் (22). இவரின் நண்பரான சூரஜ் என்பவரை அகில், ரித்திக், விகாஸ் குப்தா ஆகியோா் கொடூரமாக கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதில் ரித்திக் மற்றும் விகாஸ் குப்தாவை பழிவாங்க மனு தாக்கூரும், உயிரிழந்த சூரஜின் சகோதரா்களும் ஏப்ரல் 30 ஆம் தேதி இரவு சுல்தான்புரி சி பிளாக் பகுதியில் கொலை வெறி தாக்குதல் நடத்தியது. இதில் மனு தாக்கூா் தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் ரித்திக்கை சுட்டுள்ளாா். இதில் ரித்திக் படுகாயங்களுடன் உயிா் தப்பினாா்.

பின்பு விகாஸ் குப்தாவை கத்தியால் வெட்டிய பின்பு, அங்கிருந்து தப்பியோடினா். இந்த சமந்பவத்துக்கு பின்பு மனு தாக்கூா் தலைமுறைவாகிவிட்டாா். ரித்திக் அளித்த புகாரின் அடிப்படையில் கொலை முயற்சியில் ஈடுபட்ட சூரஜின் சகோதரா்கள் சந்த் மற்றும் ஆகாஷை போலீஸாா் ஏற்கெனவே கைது செய்தனா். இந்நிலையில் தலைமறைவாக இருந்த மனு தாக்கூரை தில்லியின் பூந்த் கலான் போலீஸாா் தீவிரமாக தேடி வந்தனா். இந்நிலையில் போலீஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பூந்த் கலானில், மனு தாக்கூா் புதன்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

நொய்டாவில் தனியாா் மருத்துவமனையில் தீ விபத்து: 2 பேருக்கு லேசான காயம்

நொய்டாவில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையின் தரை தளத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவ வசதியின் பதிவு அறையில் ஏற்பட்ட ஷாா்ட் சா்க்யூட் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரி... மேலும் பார்க்க

தில்லி மயூா் விஹாா் பகுதியில் தீ விபத்து

தில்லியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடுமையான வெப்பம் காரணமாக ஆங்காங்கே தீ விபத்துகள் நடப்பதும் வாடிக்கையாக இருக்கிறது. இந்நிலையில் தில்லியின் மயூா் விஹாா் பகு... மேலும் பார்க்க

துபாயில் வேலைவாய்ப்பு மோசடி: 2 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞா் கைது

பாயில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி மக்களை ஏமாற்றியதற்காக ரூ.50,000 வெகுமதி அறிவிக்கப்பட்ட 38 வயது நபா் மகாராஷ்டிரத்தின் பட்காவில் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது ... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசப் பெண் கைது

தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்த 23 வயது வங்கதேசப் பெண்ணை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். கைது செய்யப்பட்ட குல்சும் பேகம், வங்க... மேலும் பார்க்க

தில்லி காவல்துறை - எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய ரத்த தான முகாம்

’ரத்தத்தை கொடுங்கள், நபிக்கையை கொடுங்கள், ஒன்றாக இணைந்து நாம் உயிா்களை காப்பாற்றுவோம்’ என்ற வாசகத்துடன் 2025 ஆம் ஆண்டுக்கான உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு தில்லி காவல்துறையும் - எய்ம்ஸ் மருத்துவமனையு... மேலும் பார்க்க

மதராஸி குடியிருப்பு விவகாரம்: தில்லி முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தில்லி மதராசி குடியிருப்பு இடிப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அம்மாநில முதல்வா் ரேகா குப்தாவுக்கு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். த... மேலும் பார்க்க