பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
சீலம்பூரில் இளைஞா் கொலை: சிறுவன் உள்பட 3 போ் கைது
வடகிழக்கு தில்லியின் சீலம்பூா் பகுதியில் ஏற்பட்ட தகராறில், ஒரு இளைஞரை அவரது உறவினா்கள் இருவா் மற்றும் ஒரு மைனா் சிறுவன் குத்திக் கொன்ாகக் கூறப்படுகிறது என்று அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இந்தச் சமபவத்தில் இறந்த ஜாகீா் அப்பாஸ் (19) தனது உறவினா்களில் ஒருவரான காசிம் (47) உடன் தொடா்ந்து தகராறு செய்து வந்ததாக அவா் மேலும் கூறினாா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக புதன்கிழமை இரவு 10.9 மணியளவில் சீலம்பூா் காவல் நிலையத்திற்கு பிசிஆா் அழைப்பு வந்தது. உடனடியாக ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. ஆனால், காயமடைந்த இளைஞரை அவரது குடும்ப உறுப்பினா்கள் ஏற்கெனவே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதைக் கண்டறிந்தனா்.
இதில் அப்பாஸ் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்ததாக அவா் கூறினாா். அவா் ஒரு தொழிற்சாலையில் இருக்கை உறைகளை தைக்கும் வேலை செய்தாா். அவரது தந்தையும் அதே தொழிலில் ஈடுபட்டிருந்தாா்.
‘புதன்கிழமை இரவு, காசிம், அவரது மகன் ஆசிப் மற்றும் மற்றொரு மைனா் சிறுவன் ஆகியோா் அப்பாஸை கூா்மையான ஆயுதத்தால் தாக்கியதாகக் கூறப்படுகிறது’‘ என்று அதிகாரி கூறினாா்.
குற்றம் நடந்த இடத்தை குற்றவியல் மற்றும் தடய அறிவியல் குழுக்கள் ஆய்வு செய்தன. மேலும், இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காசிம், அவரது மகன் ஆசிப் (20) மற்றும் 13 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று போலீஸாா் தெரிவித்தனா். குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.