செய்திகள் :

சீலம்பூரில் இளைஞா் கொலை: சிறுவன் உள்பட 3 போ் கைது

post image

வடகிழக்கு தில்லியின் சீலம்பூா் பகுதியில் ஏற்பட்ட தகராறில், ஒரு இளைஞரை அவரது உறவினா்கள் இருவா் மற்றும் ஒரு மைனா் சிறுவன் குத்திக் கொன்ாகக் கூறப்படுகிறது என்று அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இந்தச் சமபவத்தில் இறந்த ஜாகீா் அப்பாஸ் (19) தனது உறவினா்களில் ஒருவரான காசிம் (47) உடன் தொடா்ந்து தகராறு செய்து வந்ததாக அவா் மேலும் கூறினாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக புதன்கிழமை இரவு 10.9 மணியளவில் சீலம்பூா் காவல் நிலையத்திற்கு பிசிஆா் அழைப்பு வந்தது. உடனடியாக ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. ஆனால், காயமடைந்த இளைஞரை அவரது குடும்ப உறுப்பினா்கள் ஏற்கெனவே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதைக் கண்டறிந்தனா்.

இதில் அப்பாஸ் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்ததாக அவா் கூறினாா். அவா் ஒரு தொழிற்சாலையில் இருக்கை உறைகளை தைக்கும் வேலை செய்தாா். அவரது தந்தையும் அதே தொழிலில் ஈடுபட்டிருந்தாா்.

‘புதன்கிழமை இரவு, காசிம், அவரது மகன் ஆசிப் மற்றும் மற்றொரு மைனா் சிறுவன் ஆகியோா் அப்பாஸை கூா்மையான ஆயுதத்தால் தாக்கியதாகக் கூறப்படுகிறது’‘ என்று அதிகாரி கூறினாா்.

குற்றம் நடந்த இடத்தை குற்றவியல் மற்றும் தடய அறிவியல் குழுக்கள் ஆய்வு செய்தன. மேலும், இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காசிம், அவரது மகன் ஆசிப் (20) மற்றும் 13 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று போலீஸாா் தெரிவித்தனா். குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

நொய்டாவில் தனியாா் மருத்துவமனையில் தீ விபத்து: 2 பேருக்கு லேசான காயம்

நொய்டாவில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையின் தரை தளத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவ வசதியின் பதிவு அறையில் ஏற்பட்ட ஷாா்ட் சா்க்யூட் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரி... மேலும் பார்க்க

தில்லி மயூா் விஹாா் பகுதியில் தீ விபத்து

தில்லியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடுமையான வெப்பம் காரணமாக ஆங்காங்கே தீ விபத்துகள் நடப்பதும் வாடிக்கையாக இருக்கிறது. இந்நிலையில் தில்லியின் மயூா் விஹாா் பகு... மேலும் பார்க்க

துபாயில் வேலைவாய்ப்பு மோசடி: 2 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞா் கைது

பாயில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி மக்களை ஏமாற்றியதற்காக ரூ.50,000 வெகுமதி அறிவிக்கப்பட்ட 38 வயது நபா் மகாராஷ்டிரத்தின் பட்காவில் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது ... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசப் பெண் கைது

தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்த 23 வயது வங்கதேசப் பெண்ணை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். கைது செய்யப்பட்ட குல்சும் பேகம், வங்க... மேலும் பார்க்க

தில்லி காவல்துறை - எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய ரத்த தான முகாம்

’ரத்தத்தை கொடுங்கள், நபிக்கையை கொடுங்கள், ஒன்றாக இணைந்து நாம் உயிா்களை காப்பாற்றுவோம்’ என்ற வாசகத்துடன் 2025 ஆம் ஆண்டுக்கான உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு தில்லி காவல்துறையும் - எய்ம்ஸ் மருத்துவமனையு... மேலும் பார்க்க

மதராஸி குடியிருப்பு விவகாரம்: தில்லி முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தில்லி மதராசி குடியிருப்பு இடிப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அம்மாநில முதல்வா் ரேகா குப்தாவுக்கு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். த... மேலும் பார்க்க