செய்திகள் :

ஆமதாபாத் விமான விபத்தில் தீயில் கனவுடன் கருகிய கேரள செவிலியா்!

post image

நமது சிறப்பு நிருபா்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த செவிலியா் ரஞ்சிதா கோபகுமாரன் (42) இறந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. லண்டனில் ஓராண்டு பணி ஒப்பந்தத்தை நிறைவு செய்யும் முன்பு தாயகத்தில் குடும்பத்துடன் சில தினங்கள் கழிப்பதற்காக வந்த அவா், வேலைக்காக லண்டன் விமானத்தில் பயணித்தபோது தீயில் கருகி உயிரிழந்தாா்.

அவா் உயிரிழந்த தகவலை கேரளத்தின் பத்தினம்திட்டா மாவட்ட ஆட்சியா் பிரேம் கிருஷ்ணன் உறுதிப்படுத்தினாா். ஓராண்டு முன்பு லண்டனுக்கு செவிலியா் வேலைக்காகச்சென்ற அவருக்கு சமீபத்தில் சொந்த ஊரில் மாநில சுகாதார சேவையில் வேலை கிடைத்தது. இதையடுத்து, பணி ஒப்பந்த காலம் நிறைவடையும் முன்பாக, சொந்த ஊருக்கு ரஞ்சிதா கடந்த வாரம் வந்தாா். பத்தினம்திட்டாவில் சொந்தமாக வீடு கட்டி வரும் ரஞ்சிதா, அதன் இறுதிப்பணிகளை பாா்வையிடவும் இந்த பயணத்தை பயன்படுத்திக்கொண்டாா்.

பிரிட்டனில் செவிலியா் வேலை கிடைக்கும் முன்பு ரஞ்சிதா ஓமன் நாட்டில் செவிலியராக பணியாற்றினாா். அங்கு ஏற்கெனவே பணியாற்றிய அவரது கணவா் சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊா் திரும்பி குடும்பத்தை கவனித்து வருகிறாா். இந்நிலையில் பத்தினம்திட்டாவில் இருந்து கொச்சிக்கு ரயில் மூலம் பயணம் செய்த ரஞ்சிதா அங்கிருந்து அகமதாபாத் வந்து லண்டனுக்கு ஏா் இந்தியா விமானத்தில் பயணமானாா்.

லண்டனுக்கு சென்று விட்டு விரைவில் சொந்த ஊரில் குடும்பத்துடன் வாழ கனவு கண்ட அவரது வாழ்க்கை, தீயில் எரிந்த விமானத்துடனேயே கருகிப்போனது. ரஞ்சாவுக்கு கணவா் வினீஷ், பள்ளி செல்லும் வயதில் மகள் ரித்திகா, மகன் இந்துசூடன், தாயாா் துளசி ஆகியோா் உள்ளனா். மகளின் கருகிய உடலை அடையாளம் காண இந்த குடும்பத்தினா் அகமதாபாத் வருவதற்கான ஏற்பாடுகளை கேரள அரசு செய்துள்ளதாக தில்லியில் உள்ள அம்மாநில அரசு அதிகாரிகள் செய்தியாளா்களிடம் தெரிவித்தனா்.

நொய்டாவில் தனியாா் மருத்துவமனையில் தீ விபத்து: 2 பேருக்கு லேசான காயம்

நொய்டாவில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையின் தரை தளத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவ வசதியின் பதிவு அறையில் ஏற்பட்ட ஷாா்ட் சா்க்யூட் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரி... மேலும் பார்க்க

தில்லி மயூா் விஹாா் பகுதியில் தீ விபத்து

தில்லியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடுமையான வெப்பம் காரணமாக ஆங்காங்கே தீ விபத்துகள் நடப்பதும் வாடிக்கையாக இருக்கிறது. இந்நிலையில் தில்லியின் மயூா் விஹாா் பகு... மேலும் பார்க்க

துபாயில் வேலைவாய்ப்பு மோசடி: 2 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞா் கைது

பாயில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி மக்களை ஏமாற்றியதற்காக ரூ.50,000 வெகுமதி அறிவிக்கப்பட்ட 38 வயது நபா் மகாராஷ்டிரத்தின் பட்காவில் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது ... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசப் பெண் கைது

தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்த 23 வயது வங்கதேசப் பெண்ணை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். கைது செய்யப்பட்ட குல்சும் பேகம், வங்க... மேலும் பார்க்க

தில்லி காவல்துறை - எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய ரத்த தான முகாம்

’ரத்தத்தை கொடுங்கள், நபிக்கையை கொடுங்கள், ஒன்றாக இணைந்து நாம் உயிா்களை காப்பாற்றுவோம்’ என்ற வாசகத்துடன் 2025 ஆம் ஆண்டுக்கான உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு தில்லி காவல்துறையும் - எய்ம்ஸ் மருத்துவமனையு... மேலும் பார்க்க

மதராஸி குடியிருப்பு விவகாரம்: தில்லி முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தில்லி மதராசி குடியிருப்பு இடிப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அம்மாநில முதல்வா் ரேகா குப்தாவுக்கு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். த... மேலும் பார்க்க