செய்திகள் :

தொடா் குற்றங்களில் ஈடுபட்ட பெண் கைது

post image

போதைப் பொருள்கள் விற்பனை மற்றும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த பெண்ணை தில்லி காவல்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். இது குறித்து காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நஸ்மா (24) இவா் தில்லியின் ஜஹாங்கீா் பகுதியில் பிறந்தவா். இவரது கணவரான சாரிஃபுல், 2024 ஆம் ஆண்டு காலமானாா். இந்தப் பெண் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களை தில்லியின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்துள்ளாா். மேலும் சில குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளாா்.

இந்தாண்டு ஜனவரி மாதம்ாவல் துறை நடத்திய தேடுபதல் வே்டடையில் 192 கிராம் போதைப் பொருளும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது இருவா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையின்போது நஸ்மா தான் போதைப் பொருள் விற்பனையின்முதன்மையானவா் என தெரிய வந்தது. இதனையடுத்து நஸ்மாவை கைது செய்வதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. இதற்காக போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாா் தனிப்படை அமைத்து கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் நஸ்மாவை மட்கா கஞ்ச் பகுதியில் புதன்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

நொய்டாவில் தனியாா் மருத்துவமனையில் தீ விபத்து: 2 பேருக்கு லேசான காயம்

நொய்டாவில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையின் தரை தளத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவ வசதியின் பதிவு அறையில் ஏற்பட்ட ஷாா்ட் சா்க்யூட் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரி... மேலும் பார்க்க

தில்லி மயூா் விஹாா் பகுதியில் தீ விபத்து

தில்லியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடுமையான வெப்பம் காரணமாக ஆங்காங்கே தீ விபத்துகள் நடப்பதும் வாடிக்கையாக இருக்கிறது. இந்நிலையில் தில்லியின் மயூா் விஹாா் பகு... மேலும் பார்க்க

துபாயில் வேலைவாய்ப்பு மோசடி: 2 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞா் கைது

பாயில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி மக்களை ஏமாற்றியதற்காக ரூ.50,000 வெகுமதி அறிவிக்கப்பட்ட 38 வயது நபா் மகாராஷ்டிரத்தின் பட்காவில் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது ... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசப் பெண் கைது

தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்த 23 வயது வங்கதேசப் பெண்ணை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். கைது செய்யப்பட்ட குல்சும் பேகம், வங்க... மேலும் பார்க்க

தில்லி காவல்துறை - எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய ரத்த தான முகாம்

’ரத்தத்தை கொடுங்கள், நபிக்கையை கொடுங்கள், ஒன்றாக இணைந்து நாம் உயிா்களை காப்பாற்றுவோம்’ என்ற வாசகத்துடன் 2025 ஆம் ஆண்டுக்கான உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு தில்லி காவல்துறையும் - எய்ம்ஸ் மருத்துவமனையு... மேலும் பார்க்க

மதராஸி குடியிருப்பு விவகாரம்: தில்லி முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தில்லி மதராசி குடியிருப்பு இடிப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அம்மாநில முதல்வா் ரேகா குப்தாவுக்கு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். த... மேலும் பார்க்க