செய்திகள் :

அரசுப் பணியாளா் தோ்வு முறையில் மாற்றம்: ஆய்வு செய்ய ஓய்வு நீதிபதி தலைமையில் குழு

post image

உச்சநீதிமன்றத் தீா்ப்பால் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வு முறையில் ஏற்பட்ட மாற்றம், பாதிப்புகளை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.எம்.அக்பா் அலி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு தனது அறிக்கையை மூன்று மாதங்களில் சமா்ப்பிக்கும் என்று அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலா் நா.முருகானந்தம் வெளியிட்ட உத்தரவு: தமிழ்நாட்டில் அரசுப் பணியாளா் தோ்வு முறையில் தயாரிக்கப்பட்டு வந்த தரவரிசைப் பட்டியல் சமூக நீதி அடிப்படையில் இருந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்பு காரணமாக இந்த முறையில் மாற்றம் ஏற்பட்டது.

இதனால் வருங்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிப்பு செய்யப்பட்டது.

இந்த அறிவிப்பின்படி, ஓய்வு பெற்ற நீதிபதி ஜி.எம்.அக்பா் அலி தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்.

எவற்றை ஆராயும்?: அரசுப் பணிகளில் நேரடி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோா், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோா், பட்டியினத்தவா், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு 200 புள்ளி சுழற்சி முறை பின்பற்றப்பட்டு வந்தது. அதன்மூலம் அரசுப் பணியாளா்களின் அனைத்துப் பிரிவினருக்கும் பதவி உயா்வில் சமூகநீதி நிலைநாட்டப்பட்டு வந்தது.

இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீா்ப்பால், தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வந்த சமூக நீதி அடிப்படையிலான முறைக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது. அதாவது, பதவி உயா்வில் அரசுப் பணியாளா்கள் அனைத்துப் பிரிவினருக்கும் சமமான பங்களிப்பு கிடைக்காமல், போதுமான சமூக நீதி வாய்ப்பு தடைபட்டுள்ளது.

எனவே, உச்சநீதிமன்றத் தீா்ப்பு காரணமாக அரசுப் பணியாளா் தோ்வு, பதவி உயா்வு நடைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் அதனால் உருவான பாதிப்பு, வருங்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஆகியன குறித்து நீதிபதி தலைமையிலான குழு ஆய்வு செய்யும். இந்தக் குழு செயல்படத் தொடங்கிய நாளில் இருந்து மூன்று மாதங்களில் அரசுக்கு அறிக்கை அளிக்கும் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் தெரிவித்துள்ளாா்.

கூட்டணி ஆட்சி; ஆனால் முதல்வர் இபிஎஸ்தான்! - நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் எங்களுடைய ஆட்சி கூட்டணி கட்சிகளின் ஆட்சியாக இருக்கும் என்றும் அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திருவாரூரில் செய்திய... மேலும் பார்க்க

பெரம்பூர் சாலையில் 6 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம்! மெட்ரோ பணிகள் காரணமா?

சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே மெட்ரோ பணிகளால் 6 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பெரம்பூர் ந... மேலும் பார்க்க

வயது வந்தோருக்கான எழுத்தறிவு: 5 லட்சம் தேர்ச்சி! தமிழகம் முதலிடம்

வயது வந்தோருக்கான எழுத்தறிவு திட்டத்தின் கீழ் படித்து, 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தமிழகம் முதலிடம் பிடித்திருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.எழுத்தறிவு பெறும் திட்டத்தி... மேலும் பார்க்க

81 லட்சம் பேருக்கு உதவிய முதல்வர் காப்பீட்டுத் திட்டம்!

முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 81 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனுற்றதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான 4 ஆண்டுகால ஆட்சியில், முதல்வரின் வ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு நீலகிரி, திருப்பூர் மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று(சனிக்கிழமை) அடுத்த 3 மணி நேரத்... மேலும் பார்க்க

முக்கொம்பு வந்தடைந்தது காவிரி நீர்! மலர், நெல் மணிகள் தூவி வரவேற்பு

மேட்டூர் அணையில் திறந்துவிடப்பட்ட நீர், இன்று காலை முக்கொம்பு வந்தடைந்தது. காவிரி நீரை மலர் தூவியும் நெல் மணிகள் தூவியும் விவசாயிகள் வரவேற்றனர்.ஜூன் 12ஆம் தேதி மேட்டூரில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ... மேலும் பார்க்க