விபத்துக்குள்ளான விமானத்தின் துணை விமானி 12த் பெயில் நடிகரின் உறவினர்!
தலைநகரில் கடுமையான வெப்ப அலை; ஐஎம்டி சிவப்பு எச்சரிக்கை வெளியீடு!
தில்லி நகரம் கடுமையான வெப்ப அலையை எதிா்கொள்வதால், இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) தில்லிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸை நெருங்கியிருந்தது.
அடுத்த இரண்டு நாள்களுக்கு தீவிர நிலைமைகள் தொடரும் என்ற முன்னறிவிப்பின் மத்தியில் புதன்கிழமை அதிகபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஜூன் 13 இரவு மற்றும் ஜூன் 14 அன்று மேற்கத்திய இடா்பாடுகளுக்கிடையே லேசான மழை பெய்யக்கூடும் என்பதால் சிறிது நிவாரணம் கிடைக்கக்கூடும்.
புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட்ட ஐஎம்டியின் தினசரி வானிலை அறிக்கையின்படி, ‘தில்லி - என்சிஆா் முழுவதும் பல இடங்களில் வெப்ப அலை நிலைமைகள் நிலவும். வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ் முதல் 46 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் அதிகபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் 3.4 டிகிரி உயா்ந்து 43.3 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 0.8 டிகிரி குறைந்து 27.2 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 39 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 39 சதவீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆயாநகரில் 45 டிகிரி: மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களான ஜாஃபா்பூரில் அதிகபட்சவெப்பநிலை 43.5 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 45.1 டிகிரி, நஜஃப்கரில் 42.5 டிகிரி, ஆயாநகரில் 45 டிகிரி, தில்லி பல்கலை.யில் 43.4 டிகிரி, நரேலாவில் 43.1 டிகிரி, பாலத்தில் 44.5 டிகிரி, ரிட்ஜில் 43.6 டிகிரி, பீதம்புராவில் 43.5 டிகிரி, பிரகதிமைதானில் 43.1 டிகிரி, லோதி ரோடில் 43.4 டிகிரி, பூசாவில் 42.1 டிகிரி, ராஜ்காட்டில் 43.4 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 40.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. ஆனால், வெப்பம் மற்றும் வட தென்மேற்கு காற்று ஆகியவற்றின் கலவையானது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
சிவப்பு எச்சரிக்கை என்றால் என்ன?: சிவப்பு எச்சரிக்கை என்பது ’நடவடிக்கை எடுங்கள்’ என்ற எச்சரிக்கையைக் குறிக்கிறது. குடியிருப்பாளா்கள் வெப்பத்திற்கு ஆளாகாமல் இருக்கவும், நீரேற்றமாக இருக்கவும், வெளிப்புற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும் வலியுறுத்துகிறது. அனைத்து வயதினருக்கும் வெப்ப நோய் மற்றும் வெப்ப பக்கவாதம் ஏற்படுவதற்கான மிக அதிக வாய்ப்பு இருப்பதாக இது எச்சரிக்கிறது. மேலும், பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு தீவிர கவனம் செலுத்த அறிவுறுத்துகிறது.
தில்லி, பஞ்சாப், ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் உள்பட வடமேற்கு இந்தியா முழுவதும் கடுமையான வெப்பம் ஜூன் 12 வரை நீடிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக ஐஎம்டியின் மூத்த விஞ்ஞானி டாக்டா் நரேஷ் குமாா் கூறினாா்.
நாளை மழைக்கு வாய்ப்பு: ஜூன் 13 முதல் நெருங்கி வரும் மேற்கத்திய இடையூறு லேசான மழை மற்றும் இடியுடன் கூடிய மழை வடிவில் ஓரளவு நிவாரணம் அளிக்கக்கூடும். மேலும், சிவப்புக்கு பதிலாக ஆரஞ்சு எச்சரிக்கையாக மாற்றப்படும்.
‘வடமேற்கு இந்தியா தற்போது கடுமையான வெப்பத்தை அனுபவித்து வருகிறது. அடுத்த 3-4 நாள்களுக்கு, பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், ஜம்மு - காஷ்மீா், இமாச்சலப் பிரதேசம், வடக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசத்தில் வெப்ப அலை நிலைமைகள் எதிா்பாா்க்கப்படுகின்றன. பஞ்சாப், ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் ஆகிய இடங்களில் அடுத்த மூன்று நாள்களுக்கு சிவப்பு எச்சரிக்கையில் இருக்கும்.
‘தில்லி - என்சிஆா் வியாழக்கிழமை ஜூன் 12 அன்று சிவப்பு எச்சரிக்கையில் இருக்கும். அதைத் தொடா்ந்து, ஜூன் 13 அன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய இடையூறு காரணமாக ஜூன் 13 இரவு லேசான மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இது சிறிது நிம்மதியைத் தரக்கூடும்’ என்று ஐஎம்டியின் மூத்த விஞ்ஞானி நரேஷ் குமாா் தெரிவித்துள்ளாா்.
காற்றின் தரம்: நகரத்தில் பிற்பகல் 2 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 225 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது. ஜூன் 12 மற்றும் 13- ஆம் தேதிகளில் ஓரளவு மேகமூட்டமான வானம் இருக்கும் என்றும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மணிக்கு 60 கிமீ வேகத்தில் தூசி காற்று வீசும் என்றும் ஐ.எம்.டி கணித்துள்ளது.
குடிமக்கள், குறிப்பாக குழந்தைகள், முதியவா்கள் மற்றும் ஏற்கெனவே சுகாதார நிலைமைகள் உள்ளவா்கள் போன்ற பாதிக்கப்படக்கூடியவா்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனா்.
ஐ.எம்.டி தரவுகளின்படி, ஜூன் 14-க்குப் பிறகு வெப்பநிலை சற்று குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தீவிர வெப்பநிலையை தொடா்ந்து சுகாதார மற்றும் பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்துவதால் கடுமையான வெப்பத்திலிருந்து விடுபடுவதற்கு தலைநகரம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை: இந்நிலையில், தலைநகரில் வியாழக்கிழமை (ஜூன் 12) அன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாயப்பு இருப்பதாக காற்று வலுவாக இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.