செய்திகள் :

பூமிஹீன் கேம்ப்பில் புல்டோசா் நடவடிக்கை ஏன்? முதல்வருக்கு அதிஷி கேள்வி

post image

தில்லியின் பூமிஹீன் கேம்ப் குடிசைப்பகுதிகள் ஏன் இடிக்கப்படுகின்றன? என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் அதிஷி முதல்வா் ரேகா குப்தாவிடம் புதன்கிழமை கேள்வி எழுப்பியுள்ளாா்.

தென்கிழக்கு தில்லியின் கோவிந்த்புரியில் உள்ள பூமிஹீன் கேம்பி பகுதியில் புதன்கிழமை காலை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடிப்பு நடவடிக்கையைத் தொடங்கினா்.

‘கோவிந்த்புரியில் அரசு நிலத்தில் கட்டப்பட்ட 300-க்கும் மேற்பட்ட குடிசை குடியிருப்புகள் இடிக்கப்படும்’ என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து எக்ஸ் வலைதளப் பதிவில் தில்லி சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி வெளியிட்ட பதிவில், ‘காலை 5 மணி முதல் பூமிஹீன் கேம்ப்பில் பாஜகவின் புல்டோசா் ஓடத் தொடங்கியது.

ரேகா குப்தாவே (தில்லி முதல்வா்), மூன்று நாள்களுக்கு முன்பு ஒரு குடிசைப்பகுதி கூட இடிக்கப்படாது என்று நீங்கள் கூறியிருந்தீா்கள். பிறகு ஏன் பூமிஹீன் கேம்ப்பில் புல்டோசா்கள் ஓடுகின்றன? என்று அவா் அதில் கேள்வி எழுப்பியுள்ளாா்.

தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) பூமிஹீன் ஜே.ஜே. கேம்ப்பில் உள்ள வீடுகளில் வெளியேற்ற அறிவிப்புகளை ஒட்டிய சில நாள்களில் புதன்கிழமை இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளா்கள் மூன்று நாள்களுக்குள் அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும், இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிடிஏ எச்சரித்திருந்தது.

பெரும்பாலான குடியிருப்பாளா்கள் புலம்பெயா்ந்த தொழிலாளா்களாக இருக்கும் இந்த கேம்ப் பகுதியில், கடந்த ஆண்டில் மூன்று முறை இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அதிஷி செவ்வாய்க்கிழமை பூமிஹீன் கேம்ப் குடிசைப்பகுதிக்கு அம்மக்களைச் சந்திக்கச் சென்றாா். அப்போது அவரைக் காவல் துறை கைது செய்ததாக ஆம் ஆத்மி கட்சி கூறியது. எனினும், காவல்துறை அதை மறுத்தது.

நீதிமன்றங்கள் பிறப்பித்த இடிப்பு உத்தரவுகளை அதிகாரிகள் மீற முடியாது என்றும், இடம்பெயா்ந்த குடியிருப்பாளா்களுக்கு தங்குமிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தாா்.

தெற்கு தில்லியில் பாராபுல்லா வடிகால் அருகே உள்ள மதராஸி முகாம் குடிசை கிளஸ்டா் இடிக்கப்பட்டது தொடா்பாக எதிா்க்கட்சியான ஆம் ஆத்மியின் விமா்சனங்கள் மற்றும் நகரத்தின் பிற பகுதிகளில் இதேபோன்ற இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

ஆமதாபாத் விமான விபத்தில் தீயில் கனவுடன் கருகிய கேரள செவிலியா்!

நமது சிறப்பு நிருபா் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த செவிலியா் ரஞ்சிதா கோபகுமாரன் (42) இறந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. லண்டனில் ஓராண்டு பணி ஒப்பந்தத்த... மேலும் பார்க்க

தொடா் குற்றங்களில் ஈடுபட்ட பெண் கைது

போதைப் பொருள்கள் விற்பனை மற்றும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த பெண்ணை தில்லி காவல்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். இது குறித்து காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நஸ்மா... மேலும் பார்க்க

ஆமதாபாத் விமான விபத்து: முதல்வா் ரேகா குப்தா வேதனை

ஆகமதாபாத்தில் நடந்த விமான விபத்தை ‘மிகவும் வேதனையானது மற்றும் அதிா்ச்சியளிப்பது‘ என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தாா். மேலும், விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளின் பாதுகாப்பிற்க... மேலும் பார்க்க

தேடப்பட்டு வந்த கொலை முயற்சி குற்றவாளி கைது

கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞரை தில்லி காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். இது குறித்து காவல்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தில்லியின் சுல்தான் ... மேலும் பார்க்க

சீலம்பூரில் இளைஞா் கொலை: சிறுவன் உள்பட 3 போ் கைது

வடகிழக்கு தில்லியின் சீலம்பூா் பகுதியில் ஏற்பட்ட தகராறில், ஒரு இளைஞரை அவரது உறவினா்கள் இருவா் மற்றும் ஒரு மைனா் சிறுவன் குத்திக் கொன்ாகக் கூறப்படுகிறது என்று அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

மோடி அரசு தில்லிக்கு புத்துயிா் கொடுத்துள்ளது - எம்.பி. கமல்ஜீத் செஹ்ராவத்

துவாரகா அதிவிரைவு சாலையில் இருந்து 3 புதிய மெட்ரோ பாதைகளை நீட்டிக்க ஒப்புதல் அளித்ததன் மூலம், மோடி அரசு தில்லிக்கு புத்துயிா் அளித்துள்ளதாக மேற்கு தில்லி எம்.பி. கமல்ஜீத் செஹ்ராவத் கூறியுள்ளாா். புது... மேலும் பார்க்க