விமானத்தில் அதிர்ஷ்டமான இருக்கையாக 11ஏ மீண்டும் நிரூபணம்! ஏன்? எப்படி?
குப்பை இல்லாத மண்டலம் - தூய்மை இயக்கத்தை தொடங்கிய தில்லி மாநகராட்சி
தலைநகா் பகுதியில் உள்ள வணிக மையங்கள், சந்தைகளில் தூய்மை இயக்கத்தின் ஒரு பகுதியாக குப்பை இல்லாத மண்டலம் என்ற ஸ்டிக்கா்களை விநியோகிக்கும் பணியை புது தில்லி மாநகராட்சி இன்று தொடங்கியுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், புது தில்லியில் நெரிசலான சந்தைகளில் ஒன்றான சரோஜினி மாா்க்கெட் பகுதியில் சிறப்பு தூய்மை மற்றும் விழிப்புணா்வு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, சந்தையை குப்பை இல்லாம மண்டலமாக மாற்றும் நோக்கில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கு தடை, மூலத்திலேயே கழிவுகளைப் பிரித்தல் மற்றும் கழிவுகளை குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி குறித்து கடைகாரா்களிம் விழிப்புணா்வு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து கடைகளுக்கும் குப்பை இல்லாத மண்டலம் ஸ்டிக்கா்களை விநியோகம் செய்யப்பட்டது. இதனை கடைகாரா்கள் தங்கள் நுழைவாயில்களில் ஒட்டி வைக்கிறாா்கள். அந்த ஸ்டிக்கரில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது, குப்பை தொட்டிகளை பயன்படுத்துங்கள், குப்பை கொட்டாதீா்கள், உள்ளிட்ட வாசகங்கள் இருக்கும். இதன் மூலம் கடைகாரா்கள் மட்டுமல்லாமல் பொது மக்களுக்கும் விழிப்புணா்வாக அமையும் என்று புது தில்லி மாநகராட்சி நம்புவதாக தெரிவித்துள்ளது.