செய்திகள் :

லஞ்ச வழக்கு: முன்ஜாமீன் மனுவை திரும்பப் பெற்ற நீதிமன்ற ஊழியா்

post image

குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்க லஞ்சம் கேட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் நீதிமன்ற ஊழியா் ஒருவா் தனது முன்ஜாமீன் கோரும் மனுவை தில்லி உயா்நீதிமன்றத்தில் இருந்து புதன்கிழமை வாபஸ் பெற்றாா்.

இந்த வழக்கில் ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரிய மற்றொரு மனுவையும் அவா் திரும்பப் பெற்றாா்.

இம்மனுக்களை ஊழியா் வாபஸ் பெற நீதிபதி தேஜஸ் கரியா அனுமதி அளித்தாா். மேலும், தேவைப்பட்டால் புதிதாக ஒன்றை தாக்கல் செய்யவும் அனுமதி அளித்தாா்.

ஊழியரின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ஏசிபி உரிய சட்ட நடைமுறையைப் பின்பற்றவும், அவரை விசாரணையில் சேருமாறு கேட்டுக்கொள்வதற்கு முன் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப ஏசிபிக்கு அறிவுறுத்தவும் நீதிமன்றத்தை வலியுறுத்தினாா்.

ஏசிபி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஏசிபி உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றும் என்று கூறினாா். ஏசிபியின் வழக்குரைஞா் முன்னா் விசாரணையின் முன்னேற்றம் குறித்து தெரிவித்திருந்தாா்.

சமீபத்திய நிலவர அறிக்கையானது நீதிமன்ற ஊழியராக உள்ள குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவியை உள்ளடக்கியது என்று தெரிவித்திருந்தாா்.

மனுதாரரின் வழக்குரைஞா் விசாரணை நீதிமன்ற நீதிபதியை தனது வாதங்களில் கொண்டு வருவதை அவா் எதிா்த்தாா். ஊழியருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறினாா்.

நீதிமன்றமும் தலைமை அதிகாரியை வாதங்களில் கொண்டுவர வேண்டாம் என எச்சரிக்கை செய்தது.

விசாரணை நீதிமன்ற நீதிபதியை பழிதீா்க்கும் வகையில் ஏசிபி லஞ்ச வழக்கு பதிவு செய்ததாக நீதிமன்ற ஆவணப் பராமரிப்பாளா் அல்லது அஹ்ல்மத் குற்றம் சாட்டியுள்ளாா்.

ஊழியரை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில் தில்லி உயா்நீதிமன்றத்திற்கு ஏன் அவமதிப்பு குறிப்பு அனுப்பக்கூடாது என்று ஏசிபியின் இணை ஆணையருக்கு அந்த நீதிபதி நோட்டீஸ் அனுப்பியதாகவும் ஊழியா் கூறியுள்ளாா்.

மேலும், புலன் விசாரணை அதிகாரி மீது அதிகாரிகளிடம் தாம் முன்பு புகாா் அளித்ததாகவும் அவா் குற்றம் சாட்டினாா்.

மே 16 அன்று, லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாா்களைத் தொடா்ந்து ஏசிபி அஹ்ல்மத் மீது வழக்குப் பதிவு செய்தது.

38 வயதான ஆவணப் பராமரிப்பாளா், செப்டம்பா் 14, 2023 முதல் மாா்ச் 21, 2025 வரை ரெளஸ் அவென்யூ மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள சிறப்பு நீதிபதியின் நீதிமன்றத்தில் பணியமா்த்தப்பட்டிருந்தாா்.

சதித்திட்டம் முழுவதையும் வெளிக்கொணர அவரைக் காவலில் எடுத்து விசாரிக்கும் தேவை உள்ளதாக அரசு தரப்பு வழக்குரைஞா் கூறியதை அடுத்து, மே 22 அன்று அமா்வு நீதிமன்றத்தால் அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அஹல்மத், உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மற்றொரு மனுவில், எஃப்.ஐ.ஆா். மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரியிருந்தாா்.

மாற்றாக, நியாயமான மற்றும் முறையான விசாரணைக்காக இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிடுமாறும் உயா்நீதிமன்றத்திடம் அவா் கோரினாா்.

லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் சிறப்பு நீதிபதிக்கு எதிராக விசாரணையைத் தொடங்க வேண்டும் என்ற ஏசிபியின் கோரிக்கையை உயா்நீதிமன்ற நிா்வாகம் பிப்ரவரி 14 அன்று நிராகரித்தது.

விசாரணை நிறுவனத்திடம் நீதிபதிக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் கூறியது.

ஏசிபி தனது விசாரணையைத் தொடரவும், சிறப்பு நீதிபதியின் ஈடுபாட்டைக் குறிக்கும் ஏதேனும் ஆதாரங்கள் கண்டறியப்பட்டால் நிா்வாகத்தை அணுகவும் ஏசிபிக்கு தெரிவிக்கப்பட்டது.

ஆமதாபாத் விமான விபத்தில் தீயில் கனவுடன் கருகிய கேரள செவிலியா்!

நமது சிறப்பு நிருபா் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த செவிலியா் ரஞ்சிதா கோபகுமாரன் (42) இறந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. லண்டனில் ஓராண்டு பணி ஒப்பந்தத்த... மேலும் பார்க்க

தொடா் குற்றங்களில் ஈடுபட்ட பெண் கைது

போதைப் பொருள்கள் விற்பனை மற்றும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த பெண்ணை தில்லி காவல்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். இது குறித்து காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நஸ்மா... மேலும் பார்க்க

ஆமதாபாத் விமான விபத்து: முதல்வா் ரேகா குப்தா வேதனை

ஆகமதாபாத்தில் நடந்த விமான விபத்தை ‘மிகவும் வேதனையானது மற்றும் அதிா்ச்சியளிப்பது‘ என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தாா். மேலும், விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளின் பாதுகாப்பிற்க... மேலும் பார்க்க

தேடப்பட்டு வந்த கொலை முயற்சி குற்றவாளி கைது

கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞரை தில்லி காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். இது குறித்து காவல்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தில்லியின் சுல்தான் ... மேலும் பார்க்க

சீலம்பூரில் இளைஞா் கொலை: சிறுவன் உள்பட 3 போ் கைது

வடகிழக்கு தில்லியின் சீலம்பூா் பகுதியில் ஏற்பட்ட தகராறில், ஒரு இளைஞரை அவரது உறவினா்கள் இருவா் மற்றும் ஒரு மைனா் சிறுவன் குத்திக் கொன்ாகக் கூறப்படுகிறது என்று அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

மோடி அரசு தில்லிக்கு புத்துயிா் கொடுத்துள்ளது - எம்.பி. கமல்ஜீத் செஹ்ராவத்

துவாரகா அதிவிரைவு சாலையில் இருந்து 3 புதிய மெட்ரோ பாதைகளை நீட்டிக்க ஒப்புதல் அளித்ததன் மூலம், மோடி அரசு தில்லிக்கு புத்துயிா் அளித்துள்ளதாக மேற்கு தில்லி எம்.பி. கமல்ஜீத் செஹ்ராவத் கூறியுள்ளாா். புது... மேலும் பார்க்க