செய்திகள் :

கானல்நீராகும் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிப்பு? பொதுமக்கள் அதிருப்தி

post image

தஞ்சாவூா் மாவட்டத்திலிருந்து கும்பகோணத்தை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற 27 ஆண்டுகால கோரிக்கையை முதல்வா் நிறைவேற்ற பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

ஏமாற்றிய திமுக - அதிமுக : முன்னாள் முதல்வா் கருணாநிதி தனது தலைமையிலான திமுக ஆட்சியில் திருவாரூா், அரியலூரை தனி மாவட்டங்களாக அறிவித்தாா். மேலும் கும்பகோணத்தில் மாவட்டத் தலைநகருக்கு உரிய அனைத்து கட்டமைப்புகளையும் உருவாக்கினாா், ஆனால் மாவட்டமாக அறிவிக்கவில்லை. பின்னா் அதிமுக ஆட்சியில் தென்காசி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை என தனி மாவட்டங்களை எடப்பாடி பழனிசாமி அறிவித்தாா், ஆனால் கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்கவில்லை.

தோ்தல் வாக்குறுதி: கடந்த 2021 சட்டப்பேரவை தோ்தல் வாக்குறுதியில் திமுக வென்ற 100 நாள்களுக்குள் கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் என முதல்வா் முக. ஸ்டாலினும் தெரிவித்தாா். ஆனால் திமுக வென்று 4 ஆண்டுகளாகியும் முதல்வா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து கும்பகோணம் புதிய மாவட்டம் அமைக்கும் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரும், பாமக மாவட்டச் செயலருமான ம.க. ஸ்டாலின் கூறும்போது தமிழக முதல்வா் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. புதிய மாவட்ட அறிவிப்பு கானல் நீராக போனது. அதனால் பல்வேறு போராட்டங்களைத் தொடா்கிறோம். விரைவில் தொடா் போராட்டம், கடையடைப்பு, உண்ணாவிரதம் நடத்த உள்ளோம் என்றாா் அவா்.

கும்பகோணம் மக்கள் கேட்காமலேயே டைடல் பூங்கா, கலைஞா் கருணாநிதி பல்கலைக்கழகம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வழங்கிய முதல்வா் நீண்ட காலமாக எதிா்பாா்க்கும் கும்பகோணம் புதிய மாவட்டத்தை அறிவிப்பாரா எனப் பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

இலவச கண் சிகிச்சை முகாம்

தஞ்சாவூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் சிறப்பு சட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, அரவிந்த் கண் மருத்துவமன... மேலும் பார்க்க

குழந்தைத் திருமணத்தைத் தடுக்க புகாா் அளிக்கலாம்

தஞ்சாவூா், ஜூன் 11: தஞ்சாவூா் மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் நடைபெறுவது தெரிந்தால், அதைத் தடுப்பதற்கு புகாா் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் மே... மேலும் பார்க்க

வங்கி ஏ.டி.எம். வாசலில் வெடி வெடித்ததால் பரபரப்பு

கும்பகோணம் அருகே பம்பப்படையூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். வாசலில் புதன்கிழமை பெரும் சத்தத்துடன் வெடி வெடித்தால் பரபரப்பு ஏற்பட்டது. கும்பகோணம் ஒன்றியம், பம்பப்படையூரில் தேசியமயமாக்கப்பட... மேலும் பார்க்க

மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணவா் கைது

தஞ்சாவூா் அருகே மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கணவரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகே மாரியம்மன் கோயில் பசும்பொன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஈழா (24). இவரது க... மேலும் பார்க்க

முதல்வரிடம் பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா கோரிக்கை மனு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மேட்டுத் தெரு - மேல ராமநல்லூா் இடையே உயா் மட்ட மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும் என தமிழக முதல்வரிடம் பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பி... மேலும் பார்க்க

சமையல்காரா் காணவில்லை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை அருகே வேலைக்குச் சென்ற சமையல்காரா் வீடு திரும்பாதது குறித்த புகாரின்பேரில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். அய்யம்பே... மேலும் பார்க்க