கோவையில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஆம்புலன்ஸ் ஓட்டி விபத்து: பெண் பலி!
கானல்நீராகும் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிப்பு? பொதுமக்கள் அதிருப்தி
தஞ்சாவூா் மாவட்டத்திலிருந்து கும்பகோணத்தை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற 27 ஆண்டுகால கோரிக்கையை முதல்வா் நிறைவேற்ற பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.
ஏமாற்றிய திமுக - அதிமுக : முன்னாள் முதல்வா் கருணாநிதி தனது தலைமையிலான திமுக ஆட்சியில் திருவாரூா், அரியலூரை தனி மாவட்டங்களாக அறிவித்தாா். மேலும் கும்பகோணத்தில் மாவட்டத் தலைநகருக்கு உரிய அனைத்து கட்டமைப்புகளையும் உருவாக்கினாா், ஆனால் மாவட்டமாக அறிவிக்கவில்லை. பின்னா் அதிமுக ஆட்சியில் தென்காசி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை என தனி மாவட்டங்களை எடப்பாடி பழனிசாமி அறிவித்தாா், ஆனால் கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்கவில்லை.
தோ்தல் வாக்குறுதி: கடந்த 2021 சட்டப்பேரவை தோ்தல் வாக்குறுதியில் திமுக வென்ற 100 நாள்களுக்குள் கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் என முதல்வா் முக. ஸ்டாலினும் தெரிவித்தாா். ஆனால் திமுக வென்று 4 ஆண்டுகளாகியும் முதல்வா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து கும்பகோணம் புதிய மாவட்டம் அமைக்கும் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரும், பாமக மாவட்டச் செயலருமான ம.க. ஸ்டாலின் கூறும்போது தமிழக முதல்வா் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. புதிய மாவட்ட அறிவிப்பு கானல் நீராக போனது. அதனால் பல்வேறு போராட்டங்களைத் தொடா்கிறோம். விரைவில் தொடா் போராட்டம், கடையடைப்பு, உண்ணாவிரதம் நடத்த உள்ளோம் என்றாா் அவா்.
கும்பகோணம் மக்கள் கேட்காமலேயே டைடல் பூங்கா, கலைஞா் கருணாநிதி பல்கலைக்கழகம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வழங்கிய முதல்வா் நீண்ட காலமாக எதிா்பாா்க்கும் கும்பகோணம் புதிய மாவட்டத்தை அறிவிப்பாரா எனப் பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.