செய்திகள் :

ம.பி.யில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 100 வீடுகள் இடிப்பு!

post image

மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வாவில் உள்ள ஷக்கர் குளம் பகுதியில் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு நடவடிக்கையின் அடிப்படையில், சட்டவிரோதமாக கட்டப்பட்ட சுமார் 100 வீடுகள் இடிக்கப்பட்டன.

காண்ட்வா பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குக் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னதாக நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவும், இருப்பினும் குடியிருப்பாளர்கள் காலி செய்யாத நிலையில் நகராட்சி ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக காண்ட்வா நகராட்சி ஆணையர் பிரியங்கா ரஜாவத் கூறுகையில்,

ஷக்கர் குளம் பகுதி அருகே ஆக்கிரமிப்பு எதிர்ப்பு நடவடிக்கையை நடத்தி வருகிறோம். கடந்த 4 மாதங்களாக அந்த இடத்தைக் காலி செய்யுமாறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறோம். சுமார் 100 சட்டவிரோத வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. 25 வீட்டு உரிமையாளர்கள் நீதிமன்ற தடை உத்தரவு வாங்கியுள்ள நிலையில், அவைகள் இடிக்கப்படவில்லை.

முன்னதாக, மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்ட நிர்வாகம் புதன்கிழமை நகரின் பேகம் பாக் பகுதியில் உள்ள சட்டவிரோத கட்டமைப்புகளை அகற்ற இடிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. மகாகாலேஷ்வர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள இந்த இடம், மொத்தம் ஏழு கட்டமைப்புகள் அகற்றப்பட்டன.

உஜ்ஜைன் மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சந்தீப் சோனி கூறுகையில், சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு, குத்தகை விதிமுறைகளை மீறியதற்காக சாலைகளின் இருபுறமும் கட்டப்பட்ட கட்டமைப்புகளின் குத்தகையை யுடிஏ ரத்து செய்தது. அதன்பிறகு இங்கு ஏழு கட்டமைப்புகள் கட்டப்பட்ட நான்கு வீடுகள், இன்னும் சில வணிக நடவடிக்கைகள் நடந்து வருகின்றன, அவற்றுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. குத்தகை ரத்து செய்யப்பட்ட பிறகு, இந்த கட்டமைப்புகள் அனைத்தும் அரசு சொத்தாக மாறியுள்ளது என்று அவர் கூறினார்.

உஜ்ஜைன் மேம்பாட்டு ஆணையத்தின் நடவடிக்கையின் கீழ், பெகு பாக் பகுதியில் நான்கு இடங்களில் உள்ள ஏழு கட்டமைப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன, மேலும் சட்டம் ஒழுங்கு நிலைமையைக் கவனிக்க அப்பகுதியில் பலத்த போலீஸ் படை நிறுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 150 போலீஸார் சம்பவ இடத்தில் உள்ளனர். அனைத்து நடவடிக்கைகளும் அமைதியாக நடைபெற்று வருவதாக ஏஎஸ்பி பார்கவா தெரிவித்தார்.

விமான விபத்தில் உயிர் தப்பியது ஒருவர் அல்ல இருவர்!

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்தது ஒருவர் அல்ல இருவர் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. பூமி சௌகான் பற்றிய தகவல்களை அறியும்போது.அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு ஒரு சில வினாடிகளில் ப... மேலும் பார்க்க

கருப்புப் பெட்டி மீட்பு! செய்திகள் நேரலை...

மருத்துவ தம்பதி பலிஅகமதாபாத் விமான விபத்தில் உதய்ப்பூரைச் சேர்ந்த மருத்துவ தம்பதி மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் பலியாகினர். லண்டனில் குடியேறும் கனவோடு இந்தியாவில் இருந்து புறப்பட்ட 5 பேரும் விமான... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! பலியான கேரள செவிலியரை விமர்சித்த வட்டாட்சியர் பணியிடை நீக்கம்!

அகமதாபாத் விமான விபத்தில் பலியான செவிலியரை விமர்சித்த கேரள தாசில்தார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் கேரளத்தைச் சேர்ந்த செவிலியர் ரஞ்சிதா கோபகுமாரன் (42) பலியானது... மேலும் பார்க்க

கடைசி செல்ஃபி! லண்டன் கனவுடன் புறப்பட்ட மருத்துவ தம்பதியின் கதை...

அகமதாபாத் விமான விபத்தில் உதய்ப்பூரைச் சேர்ந்த மருத்துவ தம்பதி மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் பலியாகினர்.அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நேற்று பிற்பகல் விபத்துக்குள்ளான... மேலும் பார்க்க

விமான விபத்திலிருந்து தப்பியதும் செய்த முதல் வேலை? விஸ்வாஸ் குமார் பதில்

நான் எப்படி உயிர் பிழைத்தேன், இப்போது உயிருடன் இருக்கிறேன் என்பதையே என்னால் நம்ப முடியவில்லை என்று ஏர் இந்திய விமான விபத்தில் உயிர் பிழைத்த விஸ்வாஸ் குமார் கூறியிருக்கிறார்.விமானம் விழுந்த போது, எனது ... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! பிரிட்டன், போர்ச்சுகல், கனடா அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் பேச்சு!

அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் வெளிநாட்டவர்களும் சிக்கி பலியானதால், அந்தந்த நாடுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.அகமதாபாத் ஏர் இந்தியா விமா... மேலும் பார்க்க