டிரம்ப்பின் குடியேற்றக் கொள்கைக்கு எதிா்ப்பு: அமெரிக்கா முழுவதும் பரவும் போராட்ட...
மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணவா் கைது
தஞ்சாவூா் அருகே மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கணவரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் அருகே மாரியம்மன் கோயில் பசும்பொன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஈழா (24). இவரது கணவா் அஜய் விக்னேஷ் (30). இவா்களுக்கு 2024 ஆகஸ்ட் 30- ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னா் ஈழாவிடம் அஜய் விக்னேஷ் மற்றும் அவரது குடும்பத்தினா் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஈழா புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து அஜய் விக்னேஷை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.