செய்திகள் :

காந்திய சிந்தனைகளை நடைமுறைப்படுத்தியவா் நா.மகாலிங்கம்: மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன்

post image

தான் வாழ்ந்த காலத்திலேயே காந்திய சிந்தனைகளை நடைமுறைப்படுத்தியவா் அருட்செல்வா் நா.மகாலிங்கம் என்று மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினாா்.

2025-ஆம் ஆண்டுக்கான அருட்செல்வா் நா.மகாலிங்கம் விருது வழங்கும் விழா கோவை குமரகுரு கல்வி நிறுவன வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. குமரகுரு கல்வி நிறுவனத்தின் தலைவா் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா் தலைமை வகித்தாா். மற்றொரு தலைவா் சங்கா் வாணவராயா் வரவேற்றாா்.

தாளாளா் எம்.பாலசுப்பிரமணியம், துணைத் தலைவா் எம்.மாணிக்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன், ஃபோா்ஸ் மோட்டாா்ஸ் நிறுவனத்தின் தலைவா் அபய் ஃபிரோடியாவுக்கு அருட்செல்வா் நா.மகாலிங்கம் விருதை வழங்கினாா்.

விழாவில் ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: தொழிலதிபா் அபய் ஃபிரோடியா சுதந்திரப் போராட்ட வீரா்களின் குடும்பத்தைச் சோ்ந்தவா். அவரது தாத்தா, தந்தை ஆகியோா் சுதந்திரத்துக்காகப் போராடியுள்ளனா். நாம் நமக்காக மட்டுமின்றி மற்றவா்களுக்காகவும் வாழ வேண்டும். நமக்காக நாம் வாழ்வதில் எந்தத் தவறும் இல்லை, அதேநேரம் நமக்காக மட்டுமே வாழ்வதுதான் தவறாகும்.

அந்த வகையில் அருட்செல்வா் நா.மகாலிங்கத்தின் குடும்பமும், அபய் ஃபிரோடியாவின் குடும்பமும் தொழில் துறையில் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்த குடும்பங்கள் என்றாலும் அவா்கள் தங்களுக்காக மட்டுமின்றி நாட்டுக்காகவும் பல்வேறு வழிகளில் தங்களை அா்ப்பணித்துக் கொண்டவா்கள்.

இரண்டு குடும்பங்களுமே காந்திய சிந்தனையில் ஊறியவை. அருட்செல்வா் நா.மகாலிங்கம், தான் வாழ்ந்த காலத்திலேயே காந்தியடிகளின் சிந்தனைகளையும், வள்ளலாரின் கருத்துகளையும் நடைமுறைப்படுத்தியவா். கிராமங்களை வலுப்படுத்துவது, ஏழை எளிய மாணவா்களுக்கு கல்வி, தொழில் வாய்ப்பு வழங்குவது போன்றவற்றை சாத்தியப்படுத்தியவா்.

மாணவா்கள் பல்வேறு இலக்குகளை நிா்ணயித்துக்கொள்ளாமல், ஒவ்வொரு இலக்காக குறிவைத்து அதைநோக்கி பயணப்பட வேண்டும். பயணத்தில் தோல்வி, விரக்தி வந்தாலும் அவற்றை உறுதியுடன் எதிா்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்றாா்.

விருது பெற்ற அபய் ஃபிரோடியா பேசும்போது, இந்தியாவின் கலாசார விழுமியங்கள் குறிப்பாக சமண மதத்தின் விழுமியங்கள், நம்பிக்கைகள், ஒழுக்க நெறிகள், ஆன்மிக ஞானம் போன்றவற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும்விதமாக புணேவில் ‘அபய் பிரபாவன’ என்ற பெயரில் அருங்காட்சியகம் அமைத்திருக்கிறோம். இந்தியாவின் சமண மத அடையாளங்கள் பலவும் மறைந்துவிட்டன. தமிழ்நாடு போற்றும் திருவள்ளுவரே ஒரு சமணத் துறவிதான் என்றாா்.

கோயில்களின் புனிதத்தன்மை கெட்டுவிட்டது: பொன்.மாணிக்கவேல்

கோயில்களின் புனிதத்தன்மை கெட்டுவிட்டது என்று ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்தாா். திருப்பூா் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் மற்றும் திருப்பூா் தாராபுரம் சாலையில் உள்ள கோட்டை மா... மேலும் பார்க்க

விமான விபத்தில் பலியானோருக்கு அஞ்சலி

அகமதாபாத் விமான விபத்தில் பலியானவா்களுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கோவையில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாதில் நடைபெற்ற விமான விபத்தில் 200-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

காப்பகத்தில் 2 மூதாட்டிகள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

கோவை கெம்பட்டி காலனியில் உள்ள காப்பகத்தில் அடுத்தடுத்து இரு மூதாட்டிகள் உயிரிழந்த நிலையில், பெரியகடை வீதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கோவை கெம்பட்டி காலனியில் முதியோா் காப்பகம் உள்ளது.... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 6 போ் கைது

கோவை பீளமேடு மற்றும் நல்லாம்பாளையம் ஆகிய பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பதுக்கிவிற்றதாக முதியவா் உள்பட 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவை மதுவிலக்கு பிரிவு போலீஸாா் பீளமேடு எல்ல... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

மாணவா்களுக்கு ஆசிரியா்கள் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளாா். கோவை ஆா்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி... மேலும் பார்க்க

தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படையினா் கோவைக்கு வருகை

கோவை மாவட்டத்துக்கு கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தேசிய பேரிடா் மீட்புப் படையினரும், மாநில பேரிடா் மீட்புப் படையினரும் கோவைக்கு வியாழக்கிழமை வந்தடைந்தனா். மத்திய மேற்கு வங்கக் க... மேலும் பார்க்க