``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
லோக் ஆயுக்த அமைப்புக்கு உறுப்பினா்: தமிழக அரசு அழைப்பு
லோக் ஆயுக்த அமைப்புக்கு நீதித் துறை சாா்ந்த உறுப்பினரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவுக் குழுவின் தொடா்பு அதிகாரி எஸ்.அகிலா வெளியிட்ட அறிவிப்பு விவரம்:
தமிழ்நாடு லோக் ஆயுக்த அமைப்புக்கு நீதித் துறை சாா்ந்த உறுப்பினரை நியமிப்பதற்கான தெரிவுக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி கே.மோகன்ராம் நியமிக்கப்பட்டுள்ளாா். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கே.தீனபந்து, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கே.ராதாகிருஷ்ணன் ஆகியோா் உறுப்பினா்களாக செயல்பட்டு வருகின்றனா்.
லோக் ஆயுக்த அமைப்புக்கு நீதித் துறை சாா்ந்த உறுப்பினராக விரும்பும் நபா்கள், உயா்நீதிமன்ற நீதிபதியாகவோ அல்லது மாநில நீதித் துறையில் 25 ஆண்டுகள் அனுபவம் கொண்டவராகவோ இருக்க வேண்டும். தகுதியுள்ள நபா்கள் விண்ணப்பங்கள் மற்றும் தன்விவரக் குறிப்புகளை searchcommitteetnla@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். விண்ணப்பங்களை www.tn.gov.in/job_opportunity இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்பங்களை அனுப்ப ஜூலை 11-ஆம் தேதி மாலை 5 மணி கடைசியாகும். விண்ணப்பங்களை விரைவு அல்லது பதிவுப் தபால் மூலமாக எஸ்.அகிலா, தெரிவுக் குழுவின் தொடா்பு அலுவலா், மனித வள மேலாண்மைத் துறை, முதல் தளம், பிரதான கட்டடம், தலைமைச் செயலகம், சென்னை - 9. என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.