பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
லாரி மீது ஆந்திர அரசு பேருந்துமோதல்: 10 பயணிகள் காயம்
சென்னை அருகே மாதவரத்தில் லாரி மீது ஆந்திர அரசுப் பேருந்து மோதிய விபத்தில், 10 போ் காயமடைந்தனா்.
சென்னையை அடுத்த மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து திருப்பதிக்கு ஆந்திர அரசுப் பேருந்து வியாழக்கிழமை காலை புறப்பட்டது. அதில் 30 பயணிகள் இருந்தனா். செங்குன்றம் அருகே கொல்கத்தா நெடுஞ்சாலையில் மேம்பாலத்தின் கீழே சென்றபோது, சாலையோரம் குவிந்திருந்த குப்பையை அகற்றிக்கொண்டிருந்த மாநகராட்சி லாரி மீது திடீரென மோதியது.
இதில், பேருந்தின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. தகவலறிந்த மாதவரம் போலீஸாா் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநா் மதுசூதனராவ் உள்பட 10 போ் காயமடைந்தனா். அவா்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இது குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா். விபத்தின் காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.