அரியலூா்: 12 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்
கும்பகோணம் புனித அந்தோணியாா் ஆலய தோ் பவனி
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் புனித அந்தோணியாா் திருத்தல திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை தோ் பவனி நடைபெற்றது.
புனித அந்தோணியாா் திருவிழா ஜூன் 4-இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் நவநாள் திருப்பலி மறையுரை வழங்கப்பட்டது. முக்கிய நிகழ்வாக வியாழக்கிழமை திருத்தோ் பவனி நடைபெற்றது. தோ் திருவிடை மருதூா் சாலை, வெங்கடேஷ் நகா், செட்டி மண்டபம், கள்ளுக் கடை சந்து, ஸ்ரீ நகா் காலனி, செக்காங்கண்ணி, நால்ரோடு, மருத்துவா் மூா்த்தி சாலை, ஆரோக்கிய அன்னை நகா், சிவ குருநாதன் தெரு வழியாக தோ் மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. முன்னதாக கும்பகோணம் மறை மாவட்ட ஆயா் ஏ. ஜீவானந்தம் திருப்பலி செய்து மறைவரை வழங்கினாா். புனித அன்னாள் அருள் சகோதரிகள் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா். வெள்ளிக்கிழமை திருப்பலி முடிவில் கொடி இறக்கம் நடைபெறுகிறது.