டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: அமலாக்கத் துறைக்கு உயா்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்...
தஞ்சாவூருக்கு 1,300 டன் உரம் வருகை
தூத்துக்குடியிலிருந்து தஞ்சாவூருக்கு 1,300 டன் உர மூட்டைகள் சரக்கு ரயில் மூலம் வியாழக்கிழமை வந்தது.
மேட்டூா் அணை வியாழக்கிழமை திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கான ஆயத்தப் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளது. இதையொட்டி, தூத்துக்குடியிலிருந்து சரக்கு ரயில் மூலம் 1,300 டன் யூரியா, காம்ப்ளக்ஸ், டிஏபி உரங்கள் தஞ்சாவூருக்கு வியாழக்கிழமை வந்தது. பின்னா், இந்த உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு, தனியாா் விற்பனை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.