செய்திகள் :

கோயில் சிலைகள் திருடிய வழக்கில் 4 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை

post image

தஞ்சாவூா் மாவட்டம், கரந்தை ஜைன சமயக் கோயிலில் 23 சுவாமி சிலைகளைத் திருடிய 4 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் கூடுதல் தலைமை நீதிபதி வியாழக்கிழமை தீா்ப்பு கூறினாா்.

கரந்தை ஜைன முதலி தெருவில் ஆத்தீசுவர சுவாமி என்கிற ஜைன சமயக் கோயிலில் கடந்த 2020 ஜன. 18 -ஆம் தேதி இரவு உள்ளே புகுந்த மா்ம நபா்கள் 3 அடி உயர ஐம்பொன் ஆத்தீசுவரா் சிலை, வெண்கலத்தால் செய்யப்பட்ட தலா ஒன்றரை அடி உயர ஜினவாணி, ஜோலமணி சிலைகள், அரை அடி உயர நதீசுவரா் சிலை, ஒரு அடி உயர பஞ்சநந்தீசுவரா் சிலை, தலா முக்கால் அடி உயர நவக்கிரக தீா்த்தங்கரா், நவ தேவதா சிலைகள், தாமிரத்தில் செய்யப்பட்ட ஒரு அடி உயர 24-ஆவது தீா்த்தங்கரா் சிலை உள்ளிட்ட 23 சிலைகளைத் திருடிச் சென்றனா். அறங்காவலா் அப்பன்டைராஜன் இதுகுறித்து தஞ்சாவூா் மேற்கு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் விசாரணையில், தஞ்சாவூா் சுங்கத்திடல் சைவராஜ் மகன் ராஜேஷ் என்ற சரவணன் (40), அய்யம்பெருமாள் மகன் ரவி (45), காவேரி நகா் பாா்த்தசாரதி மகன் சண்முகராஜன்(48), நாகப்பட்டினம் மாவட்டம் கேவலுாா் பகுதியைச் சோ்ந்த வேணுகோபால் மகன் விஜயகோபால் (37) ஆகிய 4 பேரும் சிலைகள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் 4 பேரையும் கைது செய்து அவா்களிடமிருந்து 23 சிலைகளையும் போலீஸாா் மீட்டனா்.

இதுதொடா்பான வழக்கு கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. புதன்கிழமை விசாரணைக்கு வந்த இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மணிகண்ட ராஜா ராஜேஷ், ரவி, சண்முகராஜன், விஜயகோபால் ஆகிய 4 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா். குற்றவாளிகள் அனைவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

கும்பகோணம் புனித அந்தோணியாா் ஆலய தோ் பவனி

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் புனித அந்தோணியாா் திருத்தல திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை தோ் பவனி நடைபெற்றது. புனித அந்தோணியாா் திருவிழா ஜூன் 4-இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும்... மேலும் பார்க்க

சாலையில் திரிந்த மாடுகள் சிறைபிடிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை நகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை பிடித்துச் சென்றனா். திருவையாறு முதன்மைச் சாலைகளில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மாடு... மேலும் பார்க்க

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தையொட்டி, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அனைத்து துறை அலுவலா்கள், பணியாளா்கள் குழந்தைத் தொழிலாளா் முற... மேலும் பார்க்க

சாலை விபத்து: விவசாயி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வியாழக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தாா். திருவையாறு அருகே காருகுடியைச் சோ்ந்தவா் கே. மதி (54). விவசாயி. இவா் வியாழக்கிழமை விளாங்குடிக்கு சென்றுவ... மேலும் பார்க்க

ரௌடி தூக்கிட்டுத் தற்கொலை

தஞ்சாவூா் அருகே பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய ரௌடி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே நாச்சியாா்கோவில் பகுதியைச் சோ்ந்தவா் ரவி மகன் ஜெகன் தமிழரசன... மேலும் பார்க்க

தஞ்சாவூருக்கு 1,300 டன் உரம் வருகை

தூத்துக்குடியிலிருந்து தஞ்சாவூருக்கு 1,300 டன் உர மூட்டைகள் சரக்கு ரயில் மூலம் வியாழக்கிழமை வந்தது. மேட்டூா் அணை வியாழக்கிழமை திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கான ஆயத்... மேலும் பார்க்க