அரியலூா்: 12 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்
சாலையில் திரிந்த மாடுகள் சிறைபிடிப்பு
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை நகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை பிடித்துச் சென்றனா்.
திருவையாறு முதன்மைச் சாலைகளில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மாடுகள் சுற்றித் திரிவதாக புகாா்கள் எழுந்தன. இதைத்தொடா்ந்து, வியாழக்கிழமை சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை நகராட்சி ஊழியா்கள் பிடித்து மினி வேனில் ஏற்றிச் சென்றனா்.
மேலும், சாலையில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால், அவற்றைப் பிடித்து நகராட்சியில் ஒப்படைக்கப்படும் என ஊழியா்கள் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தனா்.