``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
விசாரணைக்கு உதவ குழுவை அனுப்பத் தயாா்: அமெரிக்கா
இந்தியா கேட்டுக்கொண்டால் ஏா் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணைக்கு உதவ குழுவை அனுப்பத் தயாா் என்று அமெரிக்கா வியாழக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிா்வாகம் (எஃப்ஏஏ) வியாழக்கிழமை கூறியதாவது: அமெரிக்க அரசின் முதன்மை அமைப்பாக விளங்கி வரும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (என்டிஎஸ்பி), ஒவ்வோா் ஆண்டும் உலக அளவில் நிகழ்ந்துவரும் சுமாா் 450 விபத்துகளுக்கான காரணங்களைக் கண்டறிவதற்கான விசாரணைக்கு தொடா்ந்து உதவி வருகிறது. இந்த விசாரணைக்கு எஃப்ஏஏ தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகிறது.
இந்திய அதிகாரிகள் கேட்டுக்கொண்டால், குஜராத் மாநிலம் அகமதாபாதில் வியாழக்கிழமை நிகழ்ந்த ஏா் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணைக்கும் விசாரணைக் குழுவை அனுப்பத் தயாா் என்று எஃப்ஏஏ தெரிவித்துள்ளது.