செய்திகள் :

யுபிஐ பரிவா்த்தனைக்கு எம்டிஆா் கட்டணம்? மத்திய நிதியமைச்சகம் மறுப்பு

post image

‘ஒருங்கிணைந்த பணம் செலுத்துதல் நடைமுறை (யுபிஐ) மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவா்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்பட உள்ளதாக பரவும் தகவல் தவறானது. வாடிக்கையாளா்கள் அச்சப்பட வேண்டாம்’ என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளா்களிடம் யுபிஐ பணப் பரிவா்த்தனை மூலம் பொருளுக்கான தொகையைப் பெறும் வணிகா்கள், அந்த எண்மத் தொழில்நுட்ப பயன்பாட்டுக்கான சேவையை வழங்கும் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு ‘எம்டிஆா்’ என்ற வணிக தள்ளுபடி விகித கட்டணத்தைச் செலுத்த வேண்டும். வணிகா்கள் வங்கிக்குச் செலுத்த வேண்டிய இந்த எம்டிஆா் கட்டணமும் இனி எண்ம பணப் பரிவா்த்தனையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளா்களிடமிருந்து வசூலிக்கப்பட உள்ளதாக தகவல் பரவியது.

இந்தத் தகவலை மத்திய நிதியமைச்சகம் மறுத்துள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

யுபிஐ பணப் பரிவா்த்தனைக்கு எம்டிஆா் கட்டணம் இனி வசூலிக்கப்படும் என்று பரவும் தகவல் முற்றிலும் தவறானது. இதுபோன்று பரப்பப்படும் அடிப்படை ஆதாரமற்ற தகவல்கள் குடிமக்களிடையே தேவையற்ற பயத்தையும் நிச்சயமற்ற சூழலையும் உருவாக்குகிறது. யுபிஐ மூலம் எண்ம பணப் பரிவா்த்தனை நடைமுறையை ஊக்குவிக்க அரசு தொடா் முயற்சிகளை எடுத்து வருகிறது. எண்ம பணப் பரிவா்த்தனைக்கு எந்தவொரு எம்டிஆா் கட்டணமும் வாடிக்கையாளா்களிடம் வசூலிக்கப்படாது என்று தெரிவித்துள்ளது.

இந்திய தேசிய பணம் செலுத்துதல் கழகம் வெளியிட்டள்ள தரவுகளின்படி, கடந்த மே மாதத்தில் யுபிஐ மூலமான எண்ம பணப் பரிவா்த்தனை இதுவரை இல்லாத வகையில் ரூ. 25.14 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது. இது முந்தைய மாதத்தைவிட 5 சதவீதம் அதிகமாகும். கடந்த ஏப்ரலில் யுபிஐ பரிவா்த்தனை மதிப்பு ரூ. 23.94 லட்சம் கோடியாக இருந்தது.

லண்டன் பயணத்தை மாற்றி விமான விபத்தில் பலியான விஜய் ரூபானி!

லூதியானா இடைத்தேர்தல் காரணமாக விஜய் ரூபானி தனது லண்டன் பயணத்தை கடைசி நேரத்தில் மாற்றியிருப்பது தெரியவந்துள்ளது. அகமதாபாத்தில் நேற்று நடந்த ஏர் இந்தியா விமானத்தில் பலியானவர்களில் குஜராத் முன்னாள் முதல்... மேலும் பார்க்க

பஞ்சாபில் விமானப் படை ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்!

பஞ்சாபின் பதான்கோட் மாவட்டத்தில், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான அபாச்சி ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. பதான்கோட் விமானப்படை தளத்திலிருந்து இன்று (ஜூன் 13) புறப்பட்ட அபாச்சி ரக ஹெலிகா... மேலும் பார்க்க

கேரளத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை! நாளை ரெட் அலர்ட்!

கேரளத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வடக்கு கர்நாடக கடல்பகுதியில் நிலவும் சுழற்சியினால், வரும் ஜூன் ... மேலும் பார்க்க

கோவாவில் தொடரும் கனமழை! 3 நாள்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கோவா மாநிலத்தில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதால், இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், கடலோர மாநிலமான கோவாவின் பல்வேறு இ... மேலும் பார்க்க

கடந்தகால விமான விபத்துகளில் தப்பி வந்த அதிசயப் பிறவிகள்!

பொதுவாக விமான விபத்துகள் நேரிடும்போது, பலி எண்ணிக்கைக் கடுமையாக இருக்கக் காரணம், உயிர்பிழைப்பதற்கான வாய்ப்பு குறைவு என்பதே.உயரத்திலிருந்து விழுவது, எரிபொருளால் வெடித்துக் சிதறுவது, விபத்து என்றாலே பயங... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு உதவ முன்வந்த எல்ஐசி!

ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கான எல்ஐசி காப்பீட்டுக் கோரிக்கைகளை சிக்கலின்றி எளிதாக முடித்துக் கொடுக்க எல்ஐசி முன்வந்துள்ளது.காப்பீடுகளுக்கான கோரிக்களை மிக எளிதாக, எவ்வித... மேலும் பார்க்க