செய்திகள் :

கூடுதல் தகவல்களைத் திரட்டி வருகிறோம் - போயிங் நிறுவனம்

post image

‘அகமதாபாத் விமான விபத்து குறித்து கூடுதல் தகவல்களைத் திரட்ட பணியாற்றி வருகிறோம்’ என்று விபத்துக்குள்ளான விமானத்தின் தயாரிப்பு நிறுவனமான போயிங் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து ஏா் இந்தியா பயணிகள் விமானம் ‘ஏஐ-171’ லண்டன் நோக்கி பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்டது. ஓடுதளத்திலிருந்து மேலெழுந்து பறக்கத் தொடங்கிய சில விநாடிகளில் அருகேயுள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்து வெடித்துச் சிதறியது. விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து இதுவரை 200-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

242 பயணிகள் மற்றும் விமானப் பணியாளா்களுடன் லண்டன் புறப்பட்ட விபத்துக்குள்ளான விமானம் ‘போயிங் 787-7 டீரிம்லைனா்’ ரகத்தைசச் சோ்ந்து. இந்த போயிங் 787-7 ட்ரீம்லைனா் ரக விமானம் கடந்த 2009-ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகின் பல நாடுகளைச் சோ்ந்த பல்வேறு விமான நிறுவனங்களில் 1,000-க்கும் மேற்பட்ட இந்த ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போயிங் 787-7 ட்ரீம்லைனா் ரக விமானம் இரட்டை என்ஜின் கொண்டது எனவும், போயிங் 787 ரக விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாவது இதுவே முதன்முறை எனவும் விமானப் போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், விபத்து குறித்து அமெரிக்காவைச் சோ்ந்த போயிங் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘விபத்து குறித்த செய்தி எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. கூடுதல் தகவல்களைத் திரட்ட பணியாற்றி வருகிறோம்’ எனக் குறிப்பிட்டது.

விபத்தின் எதிரொலியாக அமெரிக்க பங்குச் சந்தையில் போயிங் நிறுவனத்தில் பங்குகள் 9 சதவீதம் வரை சரிந்தன.

லண்டன் பயணத்தை மாற்றி விமான விபத்தில் பலியான விஜய் ரூபானி!

லூதியானா இடைத்தேர்தல் காரணமாக விஜய் ரூபானி தனது லண்டன் பயணத்தை கடைசி நேரத்தில் மாற்றியிருப்பது தெரியவந்துள்ளது. அகமதாபாத்தில் நேற்று நடந்த ஏர் இந்தியா விமானத்தில் பலியானவர்களில் குஜராத் முன்னாள் முதல்... மேலும் பார்க்க

பஞ்சாபில் விமானப் படை ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்!

பஞ்சாபின் பதான்கோட் மாவட்டத்தில், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான அபாச்சி ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. பதான்கோட் விமானப்படை தளத்திலிருந்து இன்று (ஜூன் 13) புறப்பட்ட அபாச்சி ரக ஹெலிகா... மேலும் பார்க்க

கேரளத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை! நாளை ரெட் அலர்ட்!

கேரளத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வடக்கு கர்நாடக கடல்பகுதியில் நிலவும் சுழற்சியினால், வரும் ஜூன் ... மேலும் பார்க்க

கோவாவில் தொடரும் கனமழை! 3 நாள்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கோவா மாநிலத்தில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதால், இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், கடலோர மாநிலமான கோவாவின் பல்வேறு இ... மேலும் பார்க்க

கடந்தகால விமான விபத்துகளில் தப்பி வந்த அதிசயப் பிறவிகள்!

பொதுவாக விமான விபத்துகள் நேரிடும்போது, பலி எண்ணிக்கைக் கடுமையாக இருக்கக் காரணம், உயிர்பிழைப்பதற்கான வாய்ப்பு குறைவு என்பதே.உயரத்திலிருந்து விழுவது, எரிபொருளால் வெடித்துக் சிதறுவது, விபத்து என்றாலே பயங... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு உதவ முன்வந்த எல்ஐசி!

ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கான எல்ஐசி காப்பீட்டுக் கோரிக்கைகளை சிக்கலின்றி எளிதாக முடித்துக் கொடுக்க எல்ஐசி முன்வந்துள்ளது.காப்பீடுகளுக்கான கோரிக்களை மிக எளிதாக, எவ்வித... மேலும் பார்க்க