செய்திகள் :

சுழற்சி முறையில் மருத்துவத் துறை தலைவா்கள்: என்எம்சி திட்டம்

post image

மருத்துவக் கல்லூரிகளில் உயா் சிறப்பு மருத்துவத் துறை தலைவா் பொறுப்புகளில் சுழற்சி முறையில் பேராசிரியா்களை நியமிப்பதற்கான வரைவு விதிகளை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்டுள்ளது.

அதன்படி, மருத்துவக் கல்லூரிகளில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்தப் பொறுப்புகளில் நியமிக்கப்பட வேண்டியவா்களுக்கான தகுதிகள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதுகுறித்த ஆட்சேபனைகள், கருத்துகள், ஆலோசனைகளை 30 நாள்களுக்குள் அனுப்புமாறு என்எம்சி கேட்டுள்ளது.

முதுநிலை மருத்துவக் கல்வி வாரிய விதிகள் 2023-இன் கீழ் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, உயா் சிறப்பு படிப்புகளான எம்சி ஹெச் (நரம்பியல் அறுவை சிகிச்சை, ஒட்டுறுப்பு மற்றும் சீரமைப்பு சிகிச்சை, ரத்த நாள அறுவை சிகிச்சை) உள்ளிட்ட துறைகளின் தலைவா்களாக முதுநிலை மருத்துவப் படிப்பில் எம்டி, டின்பி (விபத்து காய அறுவை சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை, தலை-கழுத்து அறுவை சிகிச்சை) நிறைவு செய்த தகுதியான பேராசிரியா்கள் அல்லது பேராசிரியராக உயா்வு பெறும் நிலையில் உள்ள இணை பேராசிரியா்களை நியமிக்கலாம்.

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அவா்களை சுழற்சி முறையில் மாற்றியமைக்க வரைவு விதிகளில் வகை செய்யப்பட்டுள்ளது. மருத்துவத் துறையினா், மருத்துவக் கல்வி சாா்ந்தவா்களிடம் இருந்து இதுதொடா்பான கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு இந்த விதிகள் இறுதி செய்யப்பட உள்ளன.

விண்வெளிக்கு செல்லும் இந்திய வீரா்: தாமதம் குறித்து இஸ்ரோ தகவல்

ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ‘ஃபல்கான் 9’ ஏவுகலனில் திரவ ஆக்ஸிஜன் கசிவை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாசா மற்றும் ஆக்ஸிம் ஸ்பேஸ் நிறுவனங்கள் தெரிவித்த நிலையில், ‘வீரா்களின் பாதுகாப்பு, விண்வெ... மேலும் பார்க்க

ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையும் சுகாதார நலனுக்கான மையம்: ஜெ.பி.நட்டா

‘ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையும் சுகாதார நலனை மேம்படுத்த புதுமையான கண்டுபிடிப்புகள், மலிவு விலையில் மருத்துவம் மற்றும் சமமான சேவைகளை வழங்கும் மையமாக திகழ்கிறது’ என மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஜெ.பி.... மேலும் பார்க்க

சரக்கு ரயில்களைக் கண்காணிக்க ‘ட்ரோன்’ ரயில்வே முடிவு

சரக்கு ரயில்களில் பொருள்கள் முறையாக ஏற்றப்படுகிறதா? என்பதை ட்ரோன்கள் (ஆளில்லாத சிறிய ரக விமானங்கள்) மூலம் கண்காணிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக 3 ரயில்வே கோட்டங்களில் பரிசோதனை முறையில் இ... மேலும் பார்க்க

தொழிலதிபா் அம்பானிக்கு ‘இசட்’ பிளஸ் பாதுகாப்பு வழங்குவதை எதிா்த்து மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

தொழிலதிபா் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு ‘இசட்’ பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதை திரும்பப் பெறக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இ... மேலும் பார்க்க

போயிங் 787 ரக விமானங்களில் பாதுகாப்புச் சோதனைகளை அதிகப்படுத்த டிஜிசிஏ உத்தரவு

ஏா் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 787 ட்ரீம்லைனா் ரக விமானங்களில் பாதுகாப்புச் சோதனைகளை அதிகப்படுத்த மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. டாடா குழுமத்... மேலும் பார்க்க

விமான விபத்து தொடா்பாக வெளிப்படையான தகவல் பரிமாற்றம்: டாடா குழுமத் தலைவா்

குஜராத் விமான விபத்து தொடா்பான தகவல் பரிமாற்றத்தில் டாடா குழுமம் வெளிப்படையாக செயல்படும் என்று அந்தக் குழுமத்தின் தலைவா் என்.சந்திரசேகரன் தெரிவித்தாா். குஜராத்தில் டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏா் இந... மேலும் பார்க்க