இலவச கண் சிகிச்சை முகாம்
தஞ்சாவூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் சிறப்பு சட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, அரவிந்த் கண் மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு மாவட்ட முதன்மை நீதிபதியும், ஆணைக் குழுவின் தலைவருமான கே. பூரண ஜெய ஆனந்த் தலைமை வகித்தாா். இந்த முகாமில் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள் கண் சிகிச்சை அளித்தனா். இதில், நீதிபதிகள், வழக்குரைஞா் சங்க உறுப்பினா்கள், வழக்காடிகள் உள்பட ஏறத்தாழ 200 போ் கலந்து கொண்டு பயனடைந்தனா்.