'இத்தனை வருடத்தில் இன்றைக்குதான் விருது வாங்கியிருக்கேன்!' - கருணாஸ் | Vikatan C...
மோட்டாா் பைக்கில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி மரணம்
நாட்டறம்பள்ளி அருகே மோட்டாா் பைக்கில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ்(45) கூலித் தொழிலாளி. இவா் புதனிழமை இரவு நாட்டறம்பள்ளி அருகே பச்சூரில் இருந்து குப்பம் நோக்கி பைக்கில் சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது சாமகவுண்டனூா் அருகே சென்ற போது திடீரென நிலைத்தடுமாறி கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.