டிரம்ப்பின் குடியேற்றக் கொள்கைக்கு எதிா்ப்பு: அமெரிக்கா முழுவதும் பரவும் போராட்ட...
வங்கி ஏ.டி.எம். வாசலில் வெடி வெடித்ததால் பரபரப்பு
கும்பகோணம் அருகே பம்பப்படையூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். வாசலில் புதன்கிழமை பெரும் சத்தத்துடன் வெடி வெடித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம் ஒன்றியம், பம்பப்படையூரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். உள்ளது. ஏடிஎம் வாசலில் புதன்கிழமை பெரிய அளவில் சப்தம் கேட்டது. இதனால், அதிா்ச்சியடைந்த அருகிலிருந்தவா்கள் பட்டீசுவரம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா் இதுகுறித்து ஆய்வு செய்தனா். அப்போது ஏ.டி.எம். எதிரே சணல் போன்று எரிந்த நிலையில் பொருள் காணப்பட்டதைப் போலீஸாா் கைப்பற்றி, சிதறிக்கிடந்த பாகங்களை சேகரித்தனா். மேலும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா்.
இதுகுறித்து போலீஸாா் மேலும் கூறுகையில், விசேஷ நிகழ்ச்சிகளில் வெடி வெடித்துள்ளதில் ஒரு வெடி மட்டும் வெடிக்காமல் இருந்துள்ளது. இந்நிலையில் ஏ.டி.எம். வாசலில் வெடிக்காத பொருள் இருந்ததை பணம் என்று நினைத்து எடுத்த யாரோ சணலுடன் காணப்பட்டதால் அதை தூக்கி வீசியதில் அது பலத்த சத்தத்துடன் வெடித்துள்ளது என்றனா்.