முதல்வரிடம் பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா கோரிக்கை மனு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மேட்டுத் தெரு - மேல ராமநல்லூா் இடையே உயா் மட்ட மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும் என தமிழக முதல்வரிடம் பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா கோரிக்கை மனு அளித்துள்ளாா்.
முதல்வா் மு.க. ஸ்டாலினை பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் எம்.எச்.ஜவாஹிருல்லா செவ்வாய்கிழமை சந்தித்து பாபநாசம் தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளா்ச்சித் திட்டங்கள் குறித்த கோரிக்கை மனு வழங்கினாா். இதில், பாபநாசம் வட்டத்தில் உள்ள அம்மாபேட்டையை தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம் அமைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மேட்டுத் தெரு - மேலராமநல்லூா் இடையே உயா்மட்ட மேம்பாலம் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட வளா்ச்சித் திட்டங்களை உடனடியாக அறிவிப்பு செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினாா்.