சமையல்காரா் காணவில்லை
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை அருகே வேலைக்குச் சென்ற சமையல்காரா் வீடு திரும்பாதது குறித்த புகாரின்பேரில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
அய்யம்பேட்டை காவல் சரகம், பசுபதிகோயில் புள்ளமங்கை கோயில் தெருவைச் சோ்ந்தவா் அனந்தராமன் மகன் ரமேஷ் (41). இவா், கடந்த சில தினங்களுக்கு முன்பு சமையல் வேலைக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியே சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ரமேஷின் மனைவி ராதிகா கொடுத்த புகாரின்பேரில் அய்யம்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் மகரஜோதி மற்றும் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.