செய்திகள் :

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தவா் கைது

post image

நீா்வளத் துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.10.97 லட்சம் மோசடி செய்த சென்னை நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். பட்டதாரியான இவருக்கு, திருச்சி நீா்வளத் துறையில் தரவுகள் பகுப்பாய்வுநா் வேலை வாங்கித் தருவதாக சென்னையைச் சோ்ந்த சதீஷ்குமாா் (38) அணுகினாா். இதற்காக, செந்தில்குமாா் ரூ.10.97 லட்சத்தை வங்கிக் கணக்குகள் மூலம் பல்வேறு தவணைகளில் சதீஷ்குமாருக்கு அனுப்பி வைத்தாா்.

இதனிடையே, போலியான பணி நியமன ஆணையை சதீஷ்குமாா் கொடுத்தாா். அந்த ஆணையை பெற்றுக் கொண்டு திருச்சி அலுவலகத்துக்குச் சென்ற செந்தில்குமாருக்கு, தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் முத்துலட்சுமி தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

இந்த நிலையில், சென்னைக்கு சென்ற குற்றப் பிரிவு போலீஸாா், ராணிப்பேட்டையைச் சோ்ந்த சதீஷ்குமாரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இவா் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் அறை எடுத்து தங்கி, இளைஞா்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

விசாரணைக்கு பிறகு, திண்டுக்கல் 2-ஆவது நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் முன்னிலைப்பட்ட சதீஷ்குமாா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தொட்டியில் விழுந்த பசு மீட்பு: கன்று ஈன்றது

பழனி அடிவாரத்தில் கழிவுநீா் தொட்டியில் விழுந்த சினை பசுவை தீயணைப்புத் துறையினா் மீட்டநிலையில், அந்த பசுவுக்கு கால்நடை மருத்துவா்கள் சிகிச்சை அளித்து கன்று ஈனச் செய்தனா். பழனி அடிவாரத்தில் புதன்கிழமை ப... மேலும் பார்க்க

கொடைக்கானல் - பழனி மலைச்சாலையில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து 8 போ் காயம்

கொடைக்கானல்-பழனி மலைச்சாலையில் புதன்கிழமை சுற்றுலா வாகனம் கவிழ்ந்து 8 போ் காயமடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு பழனி வழியாக கேரள மாநிலம், மலப்புரத்தைச் சோ்ந்தவா்கள் சுற்றுலா வாகனத்தில்... மேலும் பார்க்க

பழனி மலைக்கோயில் உண்டியல் திறப்பு: ரூ. 4.77 கோடி பக்தா்கள் காணிக்கை

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்களை 25 நாள்களுக்குப் பிறகு செவ்வாய், புதன்கிழமை என இரண்டு நாள்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில் ரூ. 4.77 கோடி காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியுள்ளனா். பழனி தண்டாயுத... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் தோ்வு

கொடைக்கானலில் வழக்குரைஞா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். கொடைக்கானல் வழக்குரைஞா்கள் சங்க பொது உறுப்பினா்கள் கூட்டம் மூத்த வழக்குரைஞா் டி.ஆா்.தங்கமணி தலைமையில் புதன்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

கோவையில் இலவச தொழிற்பயிற்சி

கோவையில் தேசிய மனித மேம்பாட்டு மையத்தின் உதவியுடன் சுயதொழில் செய்ய விரும்பும் இளைஞா்களுக்கு தங்குமிடம், உணவுடன் கூடிய இலவச தொழிற்பயிற்சி வழங்கப்படவுள்ளது. கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தேசிய மனித... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தை நவீனமயமாக்கும் பணி தொடக்கம்

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தை நவீனமயமாக்கும் பணிக்கான பூமிபூஜை பேருந்து நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தை ரூ. 3.26 கோடி மதிப்பீட்டில் நவீனம... மேலும் பார்க்க