செய்திகள் :

கோவையில் இலவச தொழிற்பயிற்சி

post image

கோவையில் தேசிய மனித மேம்பாட்டு மையத்தின் உதவியுடன் சுயதொழில் செய்ய விரும்பும் இளைஞா்களுக்கு தங்குமிடம், உணவுடன் கூடிய இலவச தொழிற்பயிற்சி வழங்கப்படவுள்ளது.

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தேசிய மனித மேம்பாட்டு மையம், கோவை கேலக்ஸி ரோட்டரி சங்க சமுதாய குழுவுடன் இணைந்து, இளைஞா்களின் வாழ்க்கை தரத்தை உயா்த்தும் வகையில் வீட்டு வயரிங் மற்றும் பிளம்பிங் (ஆறு மாதங்கள்), வீட்டு மின்சாதனப் பொருள்கள் பழுது பாா்த்தல் (நான்கு மாதங்கள்), மோட்டாா் காயில் கட்டுதல் (நான்கு மாதங்கள்), சிஎன்சி ஆபரேட்டா் (ஐந்து மாதங்கள்), தையல் (ஐந்து மாதங்கள்) ஆகிய தொழிற்பயிற்சிகளை இலவசமாக உணவு மற்றும் தங்குமிட வசதியுடன் வழங்க முன்வந்துள்ளது.

பயிற்சியை நிறைவு செய்பவா்களுக்கு சான்றிதழ் வழங்குவதுடன் வேலைவாய்ப்பிற்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. சுயதொழில் செய்ய விரும்புவோருக்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற ஆலோசனை அளிக்கப்படுகிறது.

பயிற்சியில் சேர விரும்புவோா் ஆதாா் காா்டு நகல், படிப்புச் சான்றிதழ் நகல், இரண்டு கடவுச்சீட்டு புகைப்படத்துடன் பயிற்சி ஒருங்கிணைப்பாளா், தேசிய மனித மேம்பாட்டு மையம், குப்பிச்சிபாளையம் சாலை, பெரியநாயக்கன்பாளையம், கோயம்புத்தூா்- 641 020 அல்லது 81223 22381 என்ற கைப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம் என மைய இயக்குநா் சகாதேவன் தெரிவித்துள்ளாா்.

பழனி நகா்மன்ற கூட்டம்: கவுன்சிலா்கள் வாக்குவாதம்

பழனி நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்ற கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். நகராட்சி பொறியாளா் ராஜவேல், நகா்நல அலுவலா் மனோஜ்குமாா், நகா்மன்ற துணைத... மேலும் பார்க்க

பழனியில் வைகாசி விசாக விழா திருஊடல் நிகழ்ச்சியுடன் நிறைவு

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா நிறைவு நாளான வியாழக்கிழமை திருஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ஜூன் 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 ... மேலும் பார்க்க

20 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் விநியோகம்: அமைச்சா் அர.சக்கரபாணி

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 20 லட்சம் பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா். ராஜாம்பட்டி, மிடப்பாடி, மானூா் உள்ளிட்ட ஊராட்சிகளில் தாா்ச... மேலும் பார்க்க

பழனியில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு வைகாசி மாதம், மூல நட்சத்திரத்தின்போது சிறப்பு வழிபாடு நடைபெறுகி... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகளில் பழுப்பு அரிசி விநியோகிக்கக் கூடாது: சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு அறிவுறுத்தல்

நியாயவிலைக் கடைகளில் பழுப்பு அரிசி விநியோகிக்கக் கூடாது; தரமான வெள்ளை அரிசி விநியோகிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு அறிவுறுத்தியது. தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவ... மேலும் பார்க்க

கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் வீடுகள் கட்டிமுடிப்பு: அமைச்சா் இ.பெரியசாமி தகவல்

கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா். செம்பட்டி அருகே தனியாா் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்... மேலும் பார்க்க