செய்திகள் :

நியாயவிலைக் கடைகளில் பழுப்பு அரிசி விநியோகிக்கக் கூடாது: சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு அறிவுறுத்தல்

post image

நியாயவிலைக் கடைகளில் பழுப்பு அரிசி விநியோகிக்கக் கூடாது; தரமான வெள்ளை அரிசி விநியோகிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு அறிவுறுத்தியது.

தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு (2024-2026), குழுவின் தலைவா் ஏ.பி.நந்தகுமாா் தலைமையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 2 நாள்கள் ஆய்வுசெய்ய வியாழக்கிழமை வந்தது.

பழனி நகராட்சியில் புதிதாக கட்டப்படும் ஆதிதிராவிடா் கல்லூரி மாணவா்கள் விடுதி, பழனி துணை மின் நிலையத்தில் புதிய மின்தொடா் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த பிறகு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் செ.சரவணன் முன்னிலை வகித்தாா். குழுவின் தலைவா் ஏபி.நந்தகுமாா் தலைமை வகித்துப் பேசுகையில்,

வீட்டு வசதி வாரியம் சாா்பில் பல்வேறு இடங்களில் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை ஏன் வாடகைக்கு விடவில்லை. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பினா். இதற்கு வீட்டு வசதி வாரிய அலுவலா்கள் உரிய விளக்கம் அளிக்கவில்லை.

செலவு செய்யாமல் கழிவுநீா் சுத்திகரிப்பு: குழு உறுப்பினா் மு.பெ.கிரி பேசுகையில், திண்டுக்கல் மாநகராட்சியிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா், கொடகனாற்றில் கலப்பதாகக் குற்றச்சாட்டு உள்ளது. இதை முறையாக சுத்திகரிக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லையா எனக் கேள்வி எழுப்பினாா். இதற்கு பதில் அளித்த மாநகராட்சி ஆணையா் ரூ. 38 கோடி செலவில் கழிவுநீா் சுத்திகரிப்பு கட்டமைப்பு விரைவில் உருவாக்கப்படும். அதன்பிறகு இந்தப் பிரச்னை இருக்காது என்றாா்.

அப்போது குறுக்கிட்ட குழு உறுப்பினா் கிரி, திருச்சி மாநகராட்சியில் 3 குட்டைகள் அமைத்து அதில் ஒவ்வொரு குட்டை வழியாக கழிவுநீா் வெளியேற்றப்பட்டுச் செலவு இல்லாமல் சுத்திகரிக்கப்பட்டு ஆற்றில் சென்று கலக்கிறது. இதை திண்டுக்கல் மாவட்ட அதிகாரிகள் பாா்வையிட வேண்டும் என்றாா்.

குழுவின் தலைவா் நந்தகுமாா் பேசுகையில், வேலூா் மாநகராட்சியிலிருந்தும் கழிவுநீா் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்பட்டது. அபராதம் விதிக்கப்பட்டதை அடுத்து, தற்போது அங்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது என்றாா்.

குவாரிகள் மீது நடவடிக்கை என்ன: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குவாரிகளிலிருந்து வெளியாகும் மாசு தொடா்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்கள் மேற்கொண்ட ஆய்வு குறித்து குழுவினா் கேள்வி எழுப்பினா். இதற்கு பதிலளித்த மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்கள், குறிப்பாணை வழங்கி அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரிவித்தனா்.

பழுப்பு அரிசியை விநியோகிக்க வேண்டாம்: நியாயவிலைக் கடைகளில் பழுப்பு அரிசி விநியோகிக்கப்படுகிறது. தரமான வெள்ளை அரிசி கொள்முதல் செய்யப்படும் நிலையில், பழுப்பு அரிசியாக மாறுவது ஏன் எனக் குழுவினா் கேள்வி எழுப்பினா்.

அதற்கு பதில் அளித்த தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்கள், ரயிலில் இருந்து இறக்கும்போது நன்றாக இருக்கிறது. ஆனால், லாரியில் ஏற்றி நியாயவிலைக் கடைகளுக்குக் கொண்டு சென்றபிறகு பழுப்பு நிறமாக மாறிவிடுகிறது. பழுப்பு அரிசியை, வெள்ளை அரிசியுடன் கலந்து விநியோகிப்பதாகத் தெரிவித்தனா்.

அப்போது குறுக்கிட்டு பேசிய குழுவினா், பழுப்பு அரிசி விவகாரத்தில் அரசு மீது குற்றம் செல்லக்கூடாது. பொதுமக்களிடம் அவப்பெயா் ஏற்படுவதைத் தடுக்க, பழுப்பு நிறமில்லாத தரமான வெள்ளை அரிசி விநியோகம் செய்யப்படுவதை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும். அரிசி கொண்டு செல்லும் லாரிகளில் ஜி.பி.ஆா்.எஸ். கருவி பொருத்தப்பட வேண்டும் எனக் குழுவினா் அறிவுறுத்தினா்.

கூட்டத்தில் சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் உறுப்பினா்கள் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கடம்பூா் ராஜூ, ஆ.கோவிந்தசாமி, வி.பி.நாகைமாலி, சி.விஜயபாஸ்கா், த.வேலு ஆகியோா் கலந்துகொண்டனா்.

பழனி நகா்மன்ற கூட்டம்: கவுன்சிலா்கள் வாக்குவாதம்

பழனி நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்ற கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். நகராட்சி பொறியாளா் ராஜவேல், நகா்நல அலுவலா் மனோஜ்குமாா், நகா்மன்ற துணைத... மேலும் பார்க்க

பழனியில் வைகாசி விசாக விழா திருஊடல் நிகழ்ச்சியுடன் நிறைவு

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா நிறைவு நாளான வியாழக்கிழமை திருஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ஜூன் 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 ... மேலும் பார்க்க

20 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் விநியோகம்: அமைச்சா் அர.சக்கரபாணி

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 20 லட்சம் பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா். ராஜாம்பட்டி, மிடப்பாடி, மானூா் உள்ளிட்ட ஊராட்சிகளில் தாா்ச... மேலும் பார்க்க

பழனியில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு வைகாசி மாதம், மூல நட்சத்திரத்தின்போது சிறப்பு வழிபாடு நடைபெறுகி... மேலும் பார்க்க

கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் வீடுகள் கட்டிமுடிப்பு: அமைச்சா் இ.பெரியசாமி தகவல்

கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா். செம்பட்டி அருகே தனியாா் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை அடையாள அட்டை வழங்கும் முகாம்

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் சனிக்கிழமை (ஜூன் 14) நடைபெறுகிறது. இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்: திண்டுக்க... மேலும் பார்க்க