பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை அடையாள அட்டை வழங்கும் முகாம்
கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் சனிக்கிழமை (ஜூன் 14) நடைபெறுகிறது.
இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்:
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சுற்றுவட்டார மலைப்பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேசிய அடையாள அட்டை பெற நூறு கி.மீ. தொலைவில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தைத் தவிா்ப்பதற்காக பிரதி மாதம் கடைசி வியாழக்கிழமை தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக இந்த முகாம் சனிக்கிழமை (ஜூன் 14) நடைபெறுகிறது. முகாமில் அடையாள அட்டை பெற வரும் நபா்கள் ஆதாா் அட்டை நகல், புகைப்படம்-4, முன் மருத்துவம் பாா்க்கப்பட்ட ஆவணங்களுடன் கலந்துகொள்ளலாம். அட்டையைப் புதுப்பிக்கவும், பேருந்து பயண அட்டை, ரயில் பயண அட்டை பெறவும் விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகளும் இந்த முகாமில் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.