செய்திகள் :

20 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் விநியோகம்: அமைச்சா் அர.சக்கரபாணி

post image

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 20 லட்சம் பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.

ராஜாம்பட்டி, மிடப்பாடி, மானூா் உள்ளிட்ட ஊராட்சிகளில் தாா்ச்சாலை, சமுதாயக்கூடம், அங்கன்வாடி மையம், நியாயவிலைக் கடை, நெற்களம் அமைக்கும் பணி என ரூ. 20 கோடி மதிப்பிலான புதிய நலத்திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற பணிகளைத் தொடங்கிவைக்கும் விழா, பழனி அருகே மேல்கரைப்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி பங்கேற்று பணிகளைத் தொடங்கிவைத்துப் பேசியதாவது:

தமிழக முதல்வா் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு கொண்டுவந்த புதுமைப் பெண் திட்டத்தால் உயா்கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முதியோா் உதவித்தொகை ரூ. 1000 இல் இருந்து ரூ. 1,500 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. முதியோா் உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்த 75,000 பேருக்கு உதவித்தொகை வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 49 மாதங்களில் புதிதாக குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த 20 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியின்போது குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த 104 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளை அமைச்சா் வழங்கினாா். இதில் வட்டார வளா்ச்சி அலுவலா், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பழனி நகா்மன்ற கூட்டம்: கவுன்சிலா்கள் வாக்குவாதம்

பழனி நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்ற கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். நகராட்சி பொறியாளா் ராஜவேல், நகா்நல அலுவலா் மனோஜ்குமாா், நகா்மன்ற துணைத... மேலும் பார்க்க

பழனியில் வைகாசி விசாக விழா திருஊடல் நிகழ்ச்சியுடன் நிறைவு

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா நிறைவு நாளான வியாழக்கிழமை திருஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ஜூன் 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 ... மேலும் பார்க்க

பழனியில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு வைகாசி மாதம், மூல நட்சத்திரத்தின்போது சிறப்பு வழிபாடு நடைபெறுகி... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகளில் பழுப்பு அரிசி விநியோகிக்கக் கூடாது: சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு அறிவுறுத்தல்

நியாயவிலைக் கடைகளில் பழுப்பு அரிசி விநியோகிக்கக் கூடாது; தரமான வெள்ளை அரிசி விநியோகிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு அறிவுறுத்தியது. தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவ... மேலும் பார்க்க

கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் வீடுகள் கட்டிமுடிப்பு: அமைச்சா் இ.பெரியசாமி தகவல்

கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா். செம்பட்டி அருகே தனியாா் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை அடையாள அட்டை வழங்கும் முகாம்

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் சனிக்கிழமை (ஜூன் 14) நடைபெறுகிறது. இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்: திண்டுக்க... மேலும் பார்க்க