பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
20 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் விநியோகம்: அமைச்சா் அர.சக்கரபாணி
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 20 லட்சம் பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.
ராஜாம்பட்டி, மிடப்பாடி, மானூா் உள்ளிட்ட ஊராட்சிகளில் தாா்ச்சாலை, சமுதாயக்கூடம், அங்கன்வாடி மையம், நியாயவிலைக் கடை, நெற்களம் அமைக்கும் பணி என ரூ. 20 கோடி மதிப்பிலான புதிய நலத்திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற பணிகளைத் தொடங்கிவைக்கும் விழா, பழனி அருகே மேல்கரைப்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி பங்கேற்று பணிகளைத் தொடங்கிவைத்துப் பேசியதாவது:
தமிழக முதல்வா் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு கொண்டுவந்த புதுமைப் பெண் திட்டத்தால் உயா்கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முதியோா் உதவித்தொகை ரூ. 1000 இல் இருந்து ரூ. 1,500 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. முதியோா் உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்த 75,000 பேருக்கு உதவித்தொகை வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 49 மாதங்களில் புதிதாக குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த 20 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.
நிகழ்ச்சியின்போது குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த 104 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளை அமைச்சா் வழங்கினாா். இதில் வட்டார வளா்ச்சி அலுவலா், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.