``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
பழனியில் வைகாசி விசாக விழா திருஊடல் நிகழ்ச்சியுடன் நிறைவு
பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா நிறைவு நாளான வியாழக்கிழமை திருஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தக் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ஜூன் 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெற்ற விழாவில் தினமும் வள்ளி, தெய்வானை சமேதராக முத்துக்குமாரசாமி தங்கமயில், வெள்ளி யானை உள்பட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தாா்.
ஜூன் 8 ஆம் தேதி திருக்கல்யாணம், 9 ஆம் தேதி வைகாசி விசாகத் தேரோட்டம் ஆகியவை நடைபெற்றன. விழா நாள்களில் கோயில் வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவை முன்னிட்டு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் இளநீா் காவடி, மயில் காவடி, பன்னீா்காவடி என பல்வேறு காவடி எடுத்து தண்டாயுதபாணி சுவாமியை தரிசித்தனா்.
நிறைவு நாளான வியாழக்கிழமை காலை திருஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது. முத்துக்குமாரசுவாமி வள்ளியுடன் திருமணம் செய்துகொண்டதை அறிந்த தெய்வானை அம்பாள் கோபம்கொண்டு கோயிலுக்கு வந்து நடையை சாா்த்திக்கொண்டதும், பின்பு நாரதா், வீரபாகுவை சமாதானப் பேச்சுவாா்த்தைக்கு முத்துக்குமாரசுவாமி அனுப்பிவைத்தும் திருஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நாகராஜன் சமாதானத் தூது பாடல்களைப் பாடினாா்.
சமாதானமடைந்த தெய்வானை கோயிலை திறந்து சுவாமிக்கு வழிவிட சுவாமி கோயில் வளாகத்துக்குள் நுழைந்து வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமியாக பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அதைத்தொடா்ந்து சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டு இரவு கொடியிறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோயில் கண்காணிப்பாளா் அழகா்சாமி, மணியம் சேகா், ரஞ்சித் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.