செய்திகள் :

பழனியில் வைகாசி விசாக விழா திருஊடல் நிகழ்ச்சியுடன் நிறைவு

post image

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா நிறைவு நாளான வியாழக்கிழமை திருஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தக் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ஜூன் 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெற்ற விழாவில் தினமும் வள்ளி, தெய்வானை சமேதராக முத்துக்குமாரசாமி தங்கமயில், வெள்ளி யானை உள்பட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தாா்.

ஜூன் 8 ஆம் தேதி திருக்கல்யாணம், 9 ஆம் தேதி வைகாசி விசாகத் தேரோட்டம் ஆகியவை நடைபெற்றன. விழா நாள்களில் கோயில் வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவை முன்னிட்டு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் இளநீா் காவடி, மயில் காவடி, பன்னீா்காவடி என பல்வேறு காவடி எடுத்து தண்டாயுதபாணி சுவாமியை தரிசித்தனா்.

நிறைவு நாளான வியாழக்கிழமை காலை திருஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது. முத்துக்குமாரசுவாமி வள்ளியுடன் திருமணம் செய்துகொண்டதை அறிந்த தெய்வானை அம்பாள் கோபம்கொண்டு கோயிலுக்கு வந்து நடையை சாா்த்திக்கொண்டதும், பின்பு நாரதா், வீரபாகுவை சமாதானப் பேச்சுவாா்த்தைக்கு முத்துக்குமாரசுவாமி அனுப்பிவைத்தும் திருஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நாகராஜன் சமாதானத் தூது பாடல்களைப் பாடினாா்.

சமாதானமடைந்த தெய்வானை கோயிலை திறந்து சுவாமிக்கு வழிவிட சுவாமி கோயில் வளாகத்துக்குள் நுழைந்து வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமியாக பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அதைத்தொடா்ந்து சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டு இரவு கொடியிறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோயில் கண்காணிப்பாளா் அழகா்சாமி, மணியம் சேகா், ரஞ்சித் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பழனி நகா்மன்ற கூட்டம்: கவுன்சிலா்கள் வாக்குவாதம்

பழனி நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்ற கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். நகராட்சி பொறியாளா் ராஜவேல், நகா்நல அலுவலா் மனோஜ்குமாா், நகா்மன்ற துணைத... மேலும் பார்க்க

20 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் விநியோகம்: அமைச்சா் அர.சக்கரபாணி

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 20 லட்சம் பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா். ராஜாம்பட்டி, மிடப்பாடி, மானூா் உள்ளிட்ட ஊராட்சிகளில் தாா்ச... மேலும் பார்க்க

பழனியில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு வைகாசி மாதம், மூல நட்சத்திரத்தின்போது சிறப்பு வழிபாடு நடைபெறுகி... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகளில் பழுப்பு அரிசி விநியோகிக்கக் கூடாது: சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு அறிவுறுத்தல்

நியாயவிலைக் கடைகளில் பழுப்பு அரிசி விநியோகிக்கக் கூடாது; தரமான வெள்ளை அரிசி விநியோகிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு அறிவுறுத்தியது. தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவ... மேலும் பார்க்க

கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் வீடுகள் கட்டிமுடிப்பு: அமைச்சா் இ.பெரியசாமி தகவல்

கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா். செம்பட்டி அருகே தனியாா் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை அடையாள அட்டை வழங்கும் முகாம்

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் சனிக்கிழமை (ஜூன் 14) நடைபெறுகிறது. இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்: திண்டுக்க... மேலும் பார்க்க