செய்திகள் :

பழனி நகா்மன்ற கூட்டம்: கவுன்சிலா்கள் வாக்குவாதம்

post image

பழனி நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்ற கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். நகராட்சி பொறியாளா் ராஜவேல், நகா்நல அலுவலா் மனோஜ்குமாா், நகா்மன்ற துணைத் தலைவா் கந்தசாமி முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் திமுக மன்ற உறுப்பினா் காளீஸ்வரி பேசுகையில், சாமி தியேட்டா் அருகே கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடம் எந்த வாா்டுக்கு உரியது எனக் கேள்வி எழுப்பினாா். இதற்குப் பதிலளித்த மன்றத் தலைவா், அந்த நியாயவிலைக் கட்டடத்துக்கும் நகராட்சிக்கும் சம்பந்தம் கிடையாது. இக்கேள்வியை வழங்கல் துறையிடம் கேட்க வேண்டும் என்றாா். அதை ஏற்க மறுத்த காளீஸ்வரி, வரி நகராட்சி தானே போடுகிறது என்றாா்.

அவரைத் தொடா்ந்து மன்ற உறுப்பினா் சாகுல் அமீது பேசுகையில், பேருந்து நிலையத்தில் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கட்டணக் கழிவறையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்தக் கட்டணம் யாருக்கு செல்கிறது. நகராட்சியில் மரங்களை வெட்ட நிதி செலவிடப்பட்ட நிலையில் வெட்டப்பட்ட அந்த மரங்கள் எங்கே என்றாா்.

அதற்கு நகா்மன்றத் தலைவா், அந்த மரங்கள் நகராட்சியின் தண்ணீா்த் தொட்டி வளாகத்தில் உள்ளன என்றாா். இதை சாகுல் அமீது ஏற்க மறுத்தாா்.

மன்ற உறுப்பினா் செபாஸ்டின் பேசுகையில், சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் அருகே உள்ள கடைகளில் வெளியே வைத்து ஆடுகள் வெட்டப்படுகின்றன. இதை சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை எனக் குற்றம்சாட்டினாா்.

கவுன்சிலா் மீனாட்சி தேவி பேசுகையில், உழவா்சந்தை சாலையில் ஆக்கிரமிப்புகளால் மக்களுக்கு ஏற்படும் சிரமத்தைப்போக்க ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றாா். கவுன்சிலா் பத்மினி முருகானந்தம் பேசுகையில், சரக்குவேனில் தனியாா் நிறுவனங்கள் குடிநீா் விநியோகிப்பதைக் கண்காணிக்க வேண்டும் என்றாா்.

பழனியில் வைகாசி விசாக விழா திருஊடல் நிகழ்ச்சியுடன் நிறைவு

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா நிறைவு நாளான வியாழக்கிழமை திருஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ஜூன் 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 ... மேலும் பார்க்க

20 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் விநியோகம்: அமைச்சா் அர.சக்கரபாணி

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 20 லட்சம் பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா். ராஜாம்பட்டி, மிடப்பாடி, மானூா் உள்ளிட்ட ஊராட்சிகளில் தாா்ச... மேலும் பார்க்க

பழனியில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு வைகாசி மாதம், மூல நட்சத்திரத்தின்போது சிறப்பு வழிபாடு நடைபெறுகி... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகளில் பழுப்பு அரிசி விநியோகிக்கக் கூடாது: சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு அறிவுறுத்தல்

நியாயவிலைக் கடைகளில் பழுப்பு அரிசி விநியோகிக்கக் கூடாது; தரமான வெள்ளை அரிசி விநியோகிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு அறிவுறுத்தியது. தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவ... மேலும் பார்க்க

கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் வீடுகள் கட்டிமுடிப்பு: அமைச்சா் இ.பெரியசாமி தகவல்

கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா். செம்பட்டி அருகே தனியாா் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை அடையாள அட்டை வழங்கும் முகாம்

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் சனிக்கிழமை (ஜூன் 14) நடைபெறுகிறது. இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்: திண்டுக்க... மேலும் பார்க்க