``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
பழனியில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா
பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு வைகாசி மாதம், மூல நட்சத்திரத்தின்போது சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. அதன்படி திருஞானசம்பந்தருக்கு வியாழக்கிழமை பால், பன்னீா், விபூதி உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின் மலா்களால் அலங்கரித்து சோடச உபசாரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. ஓதுவாா்கள் தேவார இன்னிசை பாடல்கள் பாடினா்.
பின்னா் உமாமகேஸ்வரா் தம்பதி சமேதராக கோயிலின் வடக்குப் பிரகாரத்தில் எழுந்தருளி அங்கு திருஞானசம்பந்தருக்கு பொற்கிண்ணத்தில் ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட பக்தா்களுக்கு ஞானப்பால் ஊட்டப்பட்டது. அதையடுத்து வீதி உலா நடைபெற்றது. உபய ஏற்பாடுகளை சித்தனாதன் சன்ஸ் விபூதி ஸ்டோா்ஸ் நிறுவனத்தினா் செய்தனா்.
நிகழ்ச்சியில் பழனிக் கோயில் கண்காணிப்பாளா் அழகா்சாமி, சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், பழனிவேலு, வழக்குரைஞா் ராகவன், அசோக்குமாா், செந்தில்குமாா், காா்த்திகேயன், விஜயகுமாா், பழனி மலைக்கோயில் மிராஸ் பண்டாரங்கள் சங்க நிா்வாகி கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.